வார்த்தைகளே வரம்
அறிஞர்களின் வார்த்தைகளில் வாழ்க்கைக்குப் புதிய வழி காட்டுபவை. ஒவ்வொரு பொன்மொழியும் ஒரு பொக்கிஷம். படித்துப் பாருங்கள், கடைபிடியுங்கள், வாழ்க்கையே மாறிவிடும்.
- இருள் எப்போதும் இருட்டை நீக்காது, ஒளி தான் இருட்டை நீக்கும். வெறுப்பால் வெறுப்பை விரட்ட முடியாது, அன்பால் தான் வெறுப்பை அழிக்க முடியும். – மார்ட்டின் லூதர் கிங் –
- புத்திசாலித்தனம் என்பது, உலகின் எந்தப் பொருளாலும் உன் ஆசையை நிறைவேற்ற முடியாது என்பதை உணர்ந்து கொள்வதே… – ஓஷோ
- திருமணம், சட்டங்கள், காவல்துறை, ராணுவம் ஆகியவை மனிதனின் கையாலாகாத்தனத்தின் அறிகுறிகளேயன்றி வேறில்லை. – ரஸ்ஸல்
- மனிதன் தன் திறமையை அறிந்துகொள்ளாமல் செய்த பிசகுக்குக் கடவுள் என்று பெயர். – புதுமைப்பித்தன்
- ஒரு பிடி மண்ணை உன்னால் உருவாக்க முடியாது. பிறகு எப்படி உன்னால் நிலத்துக்கு ஒரு விலையை நிர்ணயிக்க முடிகிறது? உரிமை கொண்டாட முடிகிறது? இந்த நிலம் எல்லோருக்கும் சொந்தம். அதற்கு யாரும் விலை நிர்ணயிக்கவோ, உரிமை கொண்டாடவோ முடியாது. – டால்ஸ்டாய்
- அறிவின் மிகப்பெரிய எதிரிஅறியாமை அல்ல. தனக்கு எல்லாம் தெரியும் எனும் மாயைதான் அறிவின் நிஜமான எதிரி. – ஸ்டீஃபன் ஹாக்கின்ஸ்
- பெருவாரியானவர்கள் நம்புவதினால் எதுவும் உண்மையாகிவிடாது; எதை மறுக்க காரணங்களே இல்லையோ அவை மட்டுமே உண்மை. – சாக்ரடீஸ்
- முழுமையான உண்மைகள் என்று எதுவும் கிடையாது.. எல்லா உண்மைகளும் கிட்டத்தட்டத்தான். – ஹென்றி மில்லர்
- கலையால் யாருக்கும் எதையும் பாடம் கற்றுத்தர முடியாது என்பது வெளிப்படை. நான்காயிரம் ஆண்டுகளுக்கு மேலாகக் கலை இருக்கிறது. மனிதர்கள் அதனிடமிருந்து ஒன்றுமே பெற்றுக்கொள்ளவில்லை. பிறகு கலையின் நோக்கம் அல்லது தேவைதான் என்ன? மனிதர்களைச் சாவுக்குத் தயார்படுத்துவது மட்டும்தான். – தார்க்கோவ்ஸ்கி
- பறப்பது சுதந்திரம் என்று பறவையைப் பார்த்து மகிழும் எவரும் பறத்தல் ஒரு இடையறாத போராட்டம் என்று புரிந்துகொண்டு இருக்கிறார்களா..? – எஸ். ராமகிருஷ்ணன்