கடலுக்கு நுழைவதற்கு முன்பு ஒரு நதி பயத்தில் நடுங்குவதாக கூறப்படுகிறது.
தாம் பயணித்த பாதையை அது திரும்பிப் பார்க்காது.
மலைச் சிகரங்களில் தொடங்கி, வனங்கள், கிராமங்கள் என்று கடந்துவந்த நீண்ட நெடிய பாதை.
எதிரில் அது பார்க்கிறது, மிகப்பெரிய சமுத்திரத்தை. அதற்குள் நுழைவது என்றால், என்றென்றைக்கும் காணாமல் போவது என்று அர்த்தம்.
ஆனால் வேறு வழியில்லை, அந்த நதி திரும்பிச்செல்ல முடியாது. எவரும் திரும்பிச் செல்ல முடியாது. திரும்பிச் செல்வது என்பது வாழ்வில் சாத்தியம் இல்லை.
சமுத்திரத்தில் நுழைவது எனும் முடிவை எடுத்துத்தான் ஆகவேண்டும். ஏனெனில் அப்போதுதான் அச்சம் அகலும். ஏனெனில் அங்குதான் நதிக்குப் புரியும்.
சமுத்திரத்தில் நுழைவது என்பது மறைந்து போவது அல்ல, அது சமுத்திரமாய் ஆவது.
- கலீல் கிப்ரான்