சைதை துரைசாமி போட்ட விதை அண்ணா தி.மு.க.வாக முளைத்தது

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 57

அக்டோபர் 1ம் தேதி தி.மு.க.வில் நடந்துவரும் சூழ்ச்சிகளை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரிடம் விவரித்தார் சைதை துரைசாமி. இதன் உண்மைத் தன்மையை விசாரித்து அறிந்துகொண்ட புரட்சித் தலைவர் அன்றைய தினமே அக்டோபர் 8ம் தேதி இரண்டு கூட்டங்களுக்குத் தேதி கொடுத்தார்.

அக்டோபர் 8ம் தேதி கூட்டத்தில், ‘மாவட்டச் செயலாளர்கள், கிளைக்கழகச் செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள், பதவியில் இருப்பவர்கள் குடும்பத்திற்கு வாங்கியிருக்கிற சொத்துக்கள் இருந்தால் கணக்குக் காட்ட வேண்டும்’ என்று உரிமைக் குரல் கொடுத்தார்.

புரட்சித்தலைவரின் ஆவேசம் அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இந்த மாற்றம் புரட்சித்தலைவரிடம் வரவேண்டும் என்பதற்காகத்தானே ரசிகர்களும் நிர்வாகிகளும் அக்டோபம் 1ம் தேதி ஒன்று கூடினார்கள். சைதை துரைசாமி உள்ளிட்ட அத்தனை ரசிகர்களும், நிர்வாகிகளும் புரட்சித்தலைவரின் பேச்சை தமிழகம் முழுக்க கொண்டுசெல்லும் பணியில் ஈடுபட்டார்கள்.

அதேநேரம், ஆளும் தி.மு.க. புரட்சித்தலைவரின் குரலைக் கேட்டு அதிர்ந்து நின்றது. 8ம் தேதி நீதி கேட்ட புரட்சித்தலைவரை 10ம் தேதி கட்சியிலிருந்து நீக்கியது. இதையடுத்து புதிய கட்சி தொடங்க வேண்டும் என்று ரசிகர்களும், பொதுமக்களும் தொடர்ந்து எம்.ஜி.ஆருக்கு அன்புடன் நெருக்கடி கொடுத்தனர்.  ஆகவே, 17ம் தேதி அ.தி.மு.க.வை தொடங்கினார் புரட்சித்தலைவர். 

சமாதான மனநிலையில் இருந்த புரட்சித்தலைவரை நியாயத்துக்குப் போராடுவதற்குத் தூண்டியது சைதை துரைசாமியின் பேச்சு என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அக்டோபர் 1ம் தேதி ரசிகர் மன்றக்கூட்டம் நடைபெறவில்லை என்றால், அன்று மட்டும் சைதை துரைசாமி துணிச்சலாக நடக்கும் உண்மைகளை எடுத்துச் சொல்லியிருக்கவில்லை என்றால், 8ம் தேதி கூட்டம், 10ம் தேதி நீக்கம் மற்றும் 17ம் தேதி அண்ணா திமுக கட்சி துவக்கம் போன்றவை அந்த தருணத்தில் நிச்சயம் நிகழ்ந்திருக்காது.

ஆகவே, அ.தி.மு.க. எனும் வலிமையான இயக்கம் தோன்றுவதற்கு விதை போட்டவர் சைதை துரைசாமி என்பது தான் வரலாற்று உண்மை.

  • நாளை பார்க்கலாம்

Leave a Comment