என்ன செய்தார் சைதை துரைசாமி – 367
கூவம் நதியை சீரமைப்பு செய்வதற்கு மேற்கொள்ள இருக்கும் நடவடிக்கைகள் குறித்து சென்னை மாமன்றத்தில் மேயர் சைதை துரைசாமி மிகவும் விரிவாக விளக்கம் அளித்தார். அந்த விளக்கத்தைக் கேட்ட பிறகே மாமன்ற உறுப்பினர்களுக்கு இந்தத் திட்டத்தின் முழுமையான பயன்கள் தெரியவந்தன.
கூவம் நதியின் இரண்டு கரைகளிலும் உறுதியான சுவர் கட்டினால் மட்டுமே ஆக்கிரமிப்புகளைத் தடுத்து நிறுத்த முடியும். அதோடு, அந்த பகுதியில் மக்கள் குடியிருப்பது அவர்களுடைய ஆரோக்கியத்திற்கும் உயிருக்கும் ஆபத்து தரும். எனவே, முதல் கட்டமாக கூவம் ஆற்றின் இரண்டு கரைகளிலும் சுற்றுச்சுவர் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டன.
பொதுப்பணித் துறை மூலம் இதற்கு ஒப்பங்கள் பெறவும், பணிகள் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி முதல் கட்டமாக பருத்திப்பட்டு முதல் சேத்துப்பட்டு மன்றோ பாலம் வரை ஆக்கிரமிப்பு இல்லாத பகுதிகளில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி மேற்கொள்ள நடவடிக்கை தொடங்கப்பட்டது. இந்தப் பணிகளை மூன்று வருடங்களுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.
இதையடுத்து கூவம் நதிக்கரையின் இரு பக்க எல்லைகளிலும் ஆக்கிரமிப்பு இல்லாத பகுதிகளில் பெருநகர சென்னை மாநகராட்சி எல்லையிலிருந்து சேத்துப்பட்டு மன்றோ பாலம் வரை சுற்றுச் சுவர் அமைக்கும் பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதோடு பூங்கா அமைக்கும் பணி, நடைபாதை அமைக்கும் பணி, மிதி வண்டி தடம் அமைக்கும் பணி மேற்கொள்வதற்கும் திட்டமிடப்பட்டன.
24 இடங்களில் பூங்கா பணி, நடைபாதை பணி, மிதி வண்டி தடம் மற்றும் பூங்காவில் செடிகள், மலர் செடிகள் அமைக்கும் பணி மற்றும் கல்லூரி சாலை பாலம் (ஆன்டர்சன் பாலம்) முதல் சேத்துப்பட்டு பாலம் வரை (மன்றோ பாலம்) இயற்கை வழித் தட பூங்கா அமைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
- நாளை பார்க்கலாம்.