ஜாக்கிரதையா இருங்க
இந்த உலகிலேயே மனிதனுக்குத்தான் அதிக சக்தி இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஒரு சில உயிரினங்களிடம் உள்ள சக்தி, நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு அற்புதமானது. இங்கே, ஒரு சிலவற்றை மட்டும் இங்கே பார்க்கலாம்.
வவ்வால்கள்:
எப்போதும் தலைகிழாக தொங்கும் வவ்வால் இருக்குதுங்களே, அது பறக்கும்போது எதிர்ப்படும் தடைகளைத் தவிர்க்க, தன் சிறகுகளால் விசித்திரமான மாய ஒலி அலைகளை செலுத்தி, அந்த ஒலி அலைகளின் எதிரொலியைக் கச்சிதமாக கணக்கிட்டு, தடையில்லாமல் பறக்கின்றான. இதுக்குப்பேரு ‘எதிரொலி இடக்கணக்கீடு’ அப்படீன்னு சொல்றாங்க. ஆங்கிலத்துல எக்கோ லொக்கேஷன் இதே யுக்தியைப் பயன்படுத்தித்தான் டால்ஃபின் மீன்களும் சகதி நிறைந்த பகுதிகளில் நீந்துகின்றனவாம்.
சுறா மீன்கள்:
நீங்க யாரு கூட வேணா கண்ணாமூச்சி ஆடி ஜெயிச்சிடலாம். ஆனா, நம்ம சுறாக்கிட்ட மட்டும் வேலைக்கே ஆகாதுன்னு சொல்றாங்க. ஏன்னா சுறா மீனோட மூளையில, மத்த உயிரினங்கள் வெளியேற்றும் மின்சார அலைகள மிகத்துல்லியமா கணக்கிடக்கூடிய ஒரு வகையான விசேஷ அணுக்கள் இருக்குதாம். அதைப் பயன்படுத்தி, மணலுக்குள்ளே மறைஞ்சிக்கிட்டிருக்கிற தம்மாத்தூண்டு மீனோட தசைகள் வெளியிடுற சிறிய அளவு மின்சார சக்தியைக்கூட கணக்கிட்டு, அதை தோண்டியெடுத்து சாப்பிட்டுவிடுமாம் இந்த சுறாக்கள்.
மலைப்பாம்பு:
மலைப்பாம்புகளுக்கும், ஒரு வகை விரியன் பாம்புவின் கண்ணுக்கும் மூக்குக்கும் இடையில், பிற உயிரினங்கள் (இரைகள்) வெளியிடக்கூடிய வெப்பத்தைக் கொண்டே அவை இருக்கும் இடத்தையும், தூரத்தையும் துல்லியமாகக் கணக்கிடக்கூடிய, ஒரு வகையான உடல் சக்தி இருக்குதாம். இதைப் பயன்படுத்தி கும்மிருட்டுலயும், தன்னோட இரையை சும்மா அசால்டா காலி பண்ணிச் சாப்பிட்டுவிடுமாம்.
பூனைகள்:
இரவு நேரத்துல, விளக்கே போடாம (வெளிச்சமே இல்லாம) இருந்தாக்கூட, கரெக்டா வந்து பால் இருக்குற இடத்தைக் கண்டுபிடிச்சி, எல்லா பாலையும் காலி பண்ணிட்டுப்போற பூனைகளைப் பத்தி உங்களுக்கெல்லாம் தெரிஞ்சிருக்கும். ஆனா, அதெப்படி வெளிச்சமே இல்லைன்னாக்கூட பூனையால மட்டும் பால் இருக்குற இடத்தைக் கண்டுபிடிச்சி குடிச்சிட்டுப் போக முடியுதுன்னு நீங்க யாராவது யோசிச்சிருக்கீங்களா?
பூனைகளோட கண்கள்ல கண்ணாடி மாதிரியான ஒரு மெல்லிய தோல் இருக்குதாம். இந்தத் திரைதான் கும்மிருட்டுல கூட எலியைப் பிடிக்கவோ/நம்ம வீட்டுப் பாலைக்குடிக்கவோ பூனைக்கு ‘இருட்டுக்கண் பார்வையைக்’ கொடுக்குதாம். இங்கே நாம் சொல்லி இருப்பது கொஞ்சம்தான், இன்னும் தனிப்பட்ட திறமையுடன் ஏராளமான உயிரினங்கள் இருக்கின்றது. அவற்றின் முன்னே மனிதனின் திறமை எல்லாம் ஜுஜுபிதான்!