மாநகராட்சி புகார் பிரிவு ரொம்ப பிஸி

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 135

மேயர் சைதை துரைசாமி மேற்கொண்ட சீர்திருத்த நடவடிக்கை காரணமாக மாநகராட்சி புகார் பிரிவு எண் 1913 மிகவும் பிஸியாக மாறியது. தினமும் 40 புகார்கள் மட்டுமே பெற்று வந்த நிலை மாறி, நாளுக்கு நாள் அதிகமான புகார்கள் வரத்தொடங்கின.  

புகார் கொடுத்த மனுதாரர் கொடுத்த கோரிக்கை நிறைவேறும் வரையிலும், ஒவ்வொரு கட்டத்திலும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. ஏதேனும் காரணங்களால் குறிப்பிட்ட புகார் மனு மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை அல்லது எடுப்பதற்கு வாய்ப்பு இல்லை என்றால், அது குறித்த தெளிவான விளக்கம் புகார்தாரருக்கு வழங்க வேண்டும் என்ற நடைமுறையையும் மேயர் சைதை துரைசாமி கொண்டுவந்தார். ஆகவே, மாநகராட்சி சேவையின் மூலம் மனுதாரர் திருப்தி அடைந்த பிறகே, அந்த புகார் மனு மீதான நடவடிக்கை முடித்து வைக்கப்பட்டது.

மேயர் சைதை துரைசாமி கையில் மனு கொடுத்தால் எப்படி விரைந்து  நடவடிக்கை எடுக்கப்படுமோ, அதுபோலவே 1913 புகார் பிரிவில் கொடுக்கப்பட்டாலும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்ற தகவல் பொதுமக்களிடம் பரவத் தொடங்கியது. மேயர் சைதை துரைசாமியின் நேரடிப் பார்வையில் 1913 புகார் பிரிவு இயங்குகிறது என்பதை அறிந்து, இந்த புகார் பிரிவின் மீது மக்களுக்கு மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டது.

இதையடுத்து பொதுமக்கள் மட்டுமின்றி பொதுநலச் சங்கத்தினரும் 1913 எண் மூலம் பயனடையத் தொடங்கினார்கள். அதேநேரம், மண்டலம் தோறும் பொதுநலச் சங்கத்தினரை அணுகி, அவர்களுடைய தீர்க்கப்படாத குறைகள் குறித்தும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும் அதிகாரிகள் விளக்கம் கொடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்தார் சைதை துரைசாமி.

அதோடு ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை நடைபெறும் துப்புரவுப் பணி முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டத்தின் போது, புகார் பிரிவில் பெறப்படும் மனுக்கள் மீதான நடவடிக்கை குறித்தும் ஆய்வு செய்யும் ஒரு புதிய பழக்கத்தைக் கொண்டுவந்தார். அதனால் சென்னை மாநகராட்சியின் 1913 புகார் எண் பிரிவு சிறப்பாகவும் வேகமாகவும் செயல்படத் தொடங்கியதால் ஒரே நாளில் 2,000 புகார்கள் பெறப்படும் அளவுக்கு மாற்றங்கள் நடந்தன. இந்த புகார் மனுக்களை தீர்த்துவைப்பதற்கு மேயர் சைதை துரைசாமி எடுத்துக்கொண்ட முயற்சிகளுக்கு பத்திரிகை, மீடியாக்களிலும் பாராட்டு கிடைத்தது.  

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment