என்ன செய்தார் சைதை துரைசாமி – 357
மேயர் சைதை துரைசாமி எந்தவொரு திட்டம் பற்றி தெரிவித்தாலும் அதில் மக்கள் நலன், ஆட்சியின் நலன், மக்கள் நலன் போன்ற அனைத்தும் கலந்திருக்கும் என்பது முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றாகவே தெரியும். தன்னுடைய சுயநலத்துக்கு ஒருபோதும் கோரிக்கை வைக்க மாட்டார் என்பதும் ஜெயலலிதாவுக்கு நன்கு தெரியும்.
ஆகவே, சிங்கப்பூர் போன்று சென்னை நகரையும் கழிவு நீர் ஓடாத நகரமாக மாற்றுவதற்கு மேயர் சைதை துரைசாமி கொடுத்த அறிக்கையை ஜெயலலிதா பாராட்டினார். இதனை செயல்படுத்தினால் மக்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதாலே அதனை ஏற்றுக்கொண்டார்.
இதனை உடனடியாக செயல்படுத்துவதற்கு ஏற்ப முழுமையான திட்டத்தை வடிவமைக்குமாறு முதல்வருடைய செயலாளராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணனிடம் ஒப்படைத்தார். இது ஒரு மிகப்பெரும் திட்டம், அதேபோல் இதனை செயல்படுத்தி முழுமையாக நடைமுறைக்குக் கொண்டுவர சில ஆண்டுகள் ஆகும் என்பதை மேயர் சைதை துரைசாமி நன்கு உணர்ந்திருந்தார்.
ஆகவே, இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்னதாக சில நடவடிக்கைகள் அதிரடியாக மேற்கொள்ள வேண்டும் என்று மேயர் சைதை துரைசாமி விரும்பினார். அதாவது, சென்னையில் நீர்வழித்தடங்கள் மற்றும் நீர் ஆதாரங்களில் கழிவு நீர் கலந்து மாசுபடுவதைத் தடுப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேயர் சைதை துரைசாமி கேட்டுக்கொண்டார்.
இதனை முதல்வர் ஜெயலலிதா ஏற்றுக்கொண்டார். அதன்படி கழிவு நீர் கலந்து மாசுபடுவதைத் தடுப்பதற்கு 150 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த பணத்தின் மூலம் கழிவுநீர் மேலாண்மைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதேநேரத்தில், முதல்வரின் செயலாளர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன் ஐ.எ.எஸ். மூலம் ஆறுகள் சீரமைப்புத் திட்டம் மிகவும் சிறப்பாக வரையறுக்கப்பட்டது. இதில் மேயர் சைதை துரைசாமியின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் பெற்றது.
- நாளை பார்க்கலாம்.