• Home
  • அரசியல்
  • தம்பி இன்னும் டீ வரல… கெஞ்சிய விஜயதாரணி

தம்பி இன்னும் டீ வரல… கெஞ்சிய விஜயதாரணி

Image

அண்ணாமலை லண்டனுக்கு எஸ்கேப்

நாளை லண்டனுக்குச் செல்லும் அண்ணாமலை எப்படியாவது தன்னுடைய இருப்பைக் காட்ட வேண்டும் என்பதற்காக வெளிப்படையாக எடப்பாடி பழனிசாமியை எக்குத்தப்பாக விமர்சனம் செய்ததால் தமிழகம் முழுக்க அ.தி.மு.க. கொதித்துக்கொண்டு இருக்கிறது.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜம்ப்பாகி வந்த விஜயதாரணி பொதுமேடையிலே, ‘நான் கட்சி மாறி வந்து 6 மாசமாச்சு. இன்னும் எந்த பதவியும் கொடுக்கப்படவில்லை’ என்று கெஞ்சியிருக்கிறார்.

எரியும் நெருப்பில் எண்ணெய் விடுவது போன்று, ‘வேறு கட்சியில் இருந்து எதிர்பார்ப்புடன் வந்தவர்கள் பதவி கேட்கத்தான் செய்வார்கள். கொஞ்சம் காத்திருக்க வேண்டும்’ என்று பிள்ளையைக் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டியிருக்கிறார்.

2024 தேர்தலில் எம்.பி.சீட் ஜெயித்தால் அமைச்சர் பதவி, தோற்றால் அரசு துறையில் ஏதேனும் பதவி என்றெல்லாம் ஆசை காட்டியே விஜயதாரணையை இழுத்து வந்திருக்கிறார்கள். இவருக்கு பதில் சொல்லாமலே அண்ணாமலை நாளை லண்டனுக்குப் போகிறார். அண்ணாமலையிடம் எப்படியாவது பதில் வாங்கிவிட வேண்டும் என்பதற்காகத் தான் பொதுமேடையில் கேட்டாராம்.

அண்ணாமலை லண்டனில் இருந்து திரும்பிவருவதற்கு எப்படியும் 6 மாதங்கள் ஆகும் என்று சொல்லப்படுவதால் வேதனையின் உச்சத்தில் இருக்கிறார் விஜயதாரணி. இருப்பதை விட்டு பறக்க ஆசைப்பட்டால் இப்படித் தான்.

Leave a Comment