சாலைகளுக்குத் தமிழ்ப் பெயர்கள்

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 246

தமிழ் மொழியின் மீது மேயர் சைதை துரைசாமிக்கு அதீதப் பற்று உண்டு. பாரதியார் பாடல்களை மனப்பாடமாக ஒப்பிக்கும் அளவுக்கு அவரது கவிதைகள் மீதும் திருக்குறள் மீதும் பேரார்வம் கொண்டவர். எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று திகழவேண்டும் என்றும் விரும்புபவர்.

சென்னை மாநகரின் பல சாலைகளுக்கு ஆங்கிலேயர் பெயர்கள் இருப்பதை அறிந்தார். அவசியமில்லாத இடங்களிலும் ஆங்கிலப் பெயர் இருப்பதை மாற்றுவதற்குத் தீர்மானித்தார். அதன்படி சென்னை மாநகரில், இந்தியர் அல்லாதோரின் பெயரில் உள்ள சாலைகளைக் கண்டறிந்து, அவற்றுக்கு புதிய தமிழ் பெயர்கள் சூட்டுவதற்கான தீர்மானத்தை மேயர் சைதை துரைசாமி சென்னை பெருமன்றத்தில் நிறைவேற்றினார்.

மொழிக்காகவும் தேசத்துக்காகவும் ஆன்மிக நெறிக்காகவும் பாடுபட்டவர்களின் பெயர்களுடன் இலக்கியச் செறிவுள்ள பெயர்களைத் தேர்வு செய்து, அரசு மூலம் தமிழ்ப் பண்பாட்டுத் துறைக்கு பரிந்துரை செய்தார். அதன்படி சென்னை, 175-வது வார்டில் உள்ள காந்தி நகர் 4-வது பிரதான சாலை, பா.இராமச்சந்திர ஆதித்தனார் சாலை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த சாலையை அன்றைய முதல்வர் ஜெயலலிதா திறந்துவைத்து பெருமை சேர்த்தார். அதேபோல் எழும்பூரில் உள்ள தமிழ் வளர்ச்சி இயக்கம், கலைப் பண்பாட்டுத் துறை, தொல்லியல் துறை ஆகிய அலுவலகங்களுடன் தமிழ் வளாகம் அமைந்துள்ள ஆல்ஸ் சாலைக்கு, தமிழ்ச் சாலை என அழகு பெயர் சூட்டப்பட்டது.

வள்ளலார் மீது மேயர் சைதை துரைசாமிக்குப் பேரன்பு உண்டு. வள்ளலாரின் சேவைக்கும் சிந்தனைக்கும் மதிப்பளிக்கும் வகையில் மின்ட் மேம்பாலம் என்று இருந்ததை வள்ளலார் மேம்பாலம் என்று மாற்றம் செய்து மக்களின் பாராட்டைப் பெற்றார்.

இதன் தொடர்ச்சியாக ஆன்டர்சன் சந்து, ஜெனரல் காலின்ஸ் ரோடு, கெல்லிஸ், கிளமென்ஸ் ரோடு, ஆர்மேனியன் தெரு, ஜோன்ஸ் தெரு, பிஷப் ரோடு போன்ற 200 சாலைகள் பெயர் மாற்றம் செய்வதற்கு அடையாளம் காணப்பட்டன. இந்தப் பெயர்களுக்குப் பதிலாக சூட்டவேண்டிய தமிழ் பெயர்களாக அகத்தியர் சாலை, அல்லிமலர் சாலை, ஆபுத்திரன் சாலை, பாவேந்தர் சாலை, கணியன் பூங்குன்றனார் தெரு, குயில் சாலை, சீதக்காதி தெரு, பொற்றாமரைத் தெரு போன்ற 200-க்கும் மேற்பட்ட பெயர்கள் தேர்வு செய்யப்பட்டன என்றாலும் பல்வேறு காரணங்களால் அவரது காலத்தில் பெயர் மாற்றம் நிறைவேறவில்லை.

  • நாளை பார்க்கலாம். பெருகிவிட்டன

Leave a Comment