பரிதாபத்தில் பா.ஜ.க. மாநிலங்கள்
குஜராத் மாடல் ஆட்சியே தலை சிறந்தது என்று அவ்வப்போது எடுத்துக்காட்டும் பா.ஜ.க.வினருக்கு அதிர்ச்சி தரும் அளவுக்கு கல்வி நிறுவன தரவரிசைப் பட்டியல் வெளியாகியிருக்கிறது. பா.ஜ.க. ஆட்சி செய்யும் அத்தனை மாநிலங்களிலும் கல்வி படுபாதாளத்தில் கிடப்பது ஆச்சர்யமாகியிருக்கிறது.
ஒவ்வொரு வருடமும் மத்திய கல்வி அமைச்சகம், சிறந்த கல்லூரிகளுக்கான தேசிய கல்வி நிறுவன தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. பொறியியல், கலை அறிவியல் என வெவ்வேறு பிரிவிகளின் கீழ இந்த தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது. அதன்படி 2024ம் ஆண்டுக்கான இந்தாண்டு பட்டியல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் உள்ள 100 தலைசிறந்த கலைக் கல்லூரிகளின் பட்டியலில் தமிழ்நாட்டில் இருந்து 37 கல்லூரிகள் இடம்பிடித்து சாதனை! இந்தியாவில் மொத்தமுள்ள 36 மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து 10 மாநிலங்கள் மட்டுமே முதல் 100 இடங்களுக்கான பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
அதேநேரம் குஜராத் – 0 உத்திர பிரதேசம் – 0 பீகார் – 0 மத்திய பிரதேசம் – 0 சட்டீஸ்கர் – 0 தெலங்கானா – 0 ஆந்திரா – 0 ஒடிசா – 0 ஹரியானா – 0 பஞ்சாப் – 0 இமாச்சல் – 0 உத்தர்காண்ட் – 0 அசாம் – 0 என்பது அதிர வைக்கிறது.
மாநில பல்கலைக்கழகங்களில் சென்னை அண்ணா பல்கலை முதலிடத்தை பெற்றுள்ளது. மருத்துவக் கல்லூரிகளுக்கான தரவரிசையில் வேலூர் சிஎம்சி 3வது இடம், புதுச்சேரி ஜிப்மர் 5வது இடம் பிடித்துள்ளது.
இந்த பட்டியலில் இடம் பிடிப்பதே கடினம். ஏனென்றால் முக்கியமான சில விசயங்கள் இருந்தாலே இந்த பட்டியலில் நுழைய முடியும். முதலில் இந்த கல்லூரிப் பேராசிரியர்கள் அனைவரும் முனைவர் பட்டம் பெற்று இருக்க வேண்டும். மாணவர், ஆசிரியர் விகிதம் சிறப்பாக இருக்க வேண்டும். பேராசிரியர்களிலும் சீனியர்கள், ஜுனியர்கள் கலந்து இருக்க வேண்டும்.
அதோடு மாணவர்கள் தேர்ச்சி விகிதம் நன்றாக இருக்க வேண்டும். வேலை வாய்ப்பு மற்றும் உயர்கல்வி. பெண்கள் அதிகமாக இங்கே படிக்க வருவதால் தேர்ச்சி விகிதம் சிறப்பு. வேலை வாய்ப்பிற்கும் இங்கே பஞ்சமில்லை. பெண் பேராசிரியர்கள், மாணவிகள் அதிகம் படிக்க வேண்டும். இத்தனை தகுதிகள் இருப்பதாலே தமிழகம் தலை நிமிர்ந்து நிற்கிறது. இது காமராஜர் தொடங்கி ஸ்டாலின் வரையிலும் போட்டு வைத்திருக்கும் விதை ஆகும்.