என்ன செய்தார் சைதை துரைசாமி – 210
கலங்கரை விளக்கம் தொடங்கி பட்டினப்பாக்கம் வரையிலான சாலையை பொதுமக்கள் போக்குவரத்துக்குக் கொண்டுவர வேண்டும் என்று விரும்பினார் மேயர் சைதை துரைசாமி. அதேநேரத்தில், கடற்கரை மணலிலும் சாலையோரங்களிலும் குடிசைகள் போட்டு வசித்தவர்களும், மீன் விற்பனை செய்து வந்தவர்களும் எந்த மாற்றத்துக்கும் தயாராக இல்லை.
ஆய்வு செய்வதற்குச் சென்ற அதிகார்களுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமின்றி முற்றுகைப் போராட்டம் நடத்தினார்கள். எனவே, இங்கு செல்வதற்கு அதிகாரிகள் யாரும் முன்வரவில்லை. அந்த மீனவ மக்களை மீறி அங்கு எதுவும் செய்ய முடியாது என்று அதிகாரிகள் மேயர் சைதை துரைசாமியிடம் சொன்னார்கள்.
அதேநேரம், அங்கு மாற்றம் செய்ய வேண்டும் என்பதில் மேயர் சைதை துரைசாமி உறுதியுடன் இருந்தார். அதேபோல், அந்த பகுதி மக்களில் ஒருவருக்குக் கூட பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதிலும் சைதை துரைசாமி உறுதியாக இருந்தார். ஆகவே, அவர்களிடம் தானே நேரில் போய் பேச்சுவார்த்தை நடத்துவதாகக் கூறினார். ஆனால், அதிகாரிகள் மட்டுமின்றி அந்த பகுதியைச் சேர்ந்த சைதை துரைசாமியின் ஆதரவாளர்களும் இதை ஆதரிக்கவில்லை.
அந்த கடற்கரை பகுதி அவர்களுக்குச் சொந்தம் என்று சொல்கிறார்கள். ஆகவே, கடற்கரை மணலில் இருந்தும் சாலையோரங்களில் இருந்தும் குடிசையை அகற்ற சம்மதிக்கவே மாட்டார்கள் என்று சொன்னார்கள். ஆனால், நேரில் சென்று மக்களுடன் பேசுவதில் உறுதியாக இருந்தார். அப்படியே நேரிலும் சென்றார்.
மேயர் சைதை துரைசாமி ஆய்வுக்கு வருகிறார் என்று தெரிந்ததும் மீனவ மக்கள் ஒன்று சேர்ந்தனர். அவர்களிடம் மேயர் சைதை துரைசாமி, ‘’நான் முதலில் உங்களுடைய குறைகளைக் கேட்க விரும்புகிறேன். உங்கள் குறைகளை தீர்த்த பிறகே கடற்கரையில் சீரமைப்பு மேற்கொள்ளப்படும்’’ என்று நம்பிக்கை கொடுத்தார். இதற்கு மக்களிடம் என்ன ரெஸ்பான்ஸ் கிடைத்தது தெரியுமா..?
- நாளை பார்க்கலாம்.