படித்தாலே இனிக்கும்
* ஒவ்வொருவரும் தங்களை அறிவாளி என்று எண்ணிக் கொள்கிறார்கள். அதனால்தான் மிகப்பலர் முட்டாள்களாக இருக்கிறார்கள்.
* அறிவாளி பொன்னான நாட்களையே கணக்கிடுகிறான்.
* அறிவாளி தடுக்கி விழுந்தால் பலமாகத்தான் விழுவான்.
* நரகத்தின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கின்றன, நள்ளிரவிலும்கூட.
* உன்னை அளவின்றிப் புகழ்கின்றவன் ஏற்கனவே உன்னை ஏமாற்றிவிட்டான் அல்லது இனி ஏமாற்ற விரும்புகிறான்.
* ஆண்டவன் ஒரு கையால் நம்மை அடிக்கிறான். மற்ற கரங்களால் அணைக்கிறான்.
* செத்த சிங்கத்தை கழுதைகூட உதைக்கும்.
* உன் கௌரவம் உனது நாக்கில் உள்ளது.
* தாயைப் பார்த்து மகளை மணம் செய்.
* கணவன் தலைவன், மனைவி அவன் தலையிலிருக்கும் மகுடம்.
* பொறாமைக்காரன் துக்கப்படுவதால் ஒன்று அவன் தொல்லைகளில் இருக்க வேண்டும், அல்லது யாரோ சிலர் அதிர்ஷ்டம் அடைந்திருக்க வேண்டும்.
* வழியைத் தவற விடுவதைவிடப் பாதி வழியில் திரும்பிவிடுவது மேல்.
* நஞ்சு விற்பவன் அழகிய விளம்பரப் பலகையைப் பெற்றிருக்கிறான்.
* மின்னலால் தாக்குண்டவன் இடியோசையைக் கேட்கமாட்டான்
* அடிமைபோல் உழைத்திடு; அரசனைப்போல் வாழ்ந்திடு.
* எவன் ஒருவன் புகழை வெறுக்கிறானோ, அவனுக்கு உண்மையான புகழ் தானாகவே வந்தடையும்.
* கேட்டால் ஒழிய யோசனை கூறாதே!
* தலையைக் காட்டிலும் உன் நாக்கிற்கு விடுமுறை கொடு.
* பெண்கள் இருக்குமிடத்தில் பேச்சு இருக்கும். வாத்துகள் இருக்குமிடத்தில் கொக்கரிப்பு இருக்கும்.
* நாளை கிடைக்கும் கோழியைவிட இன்று கிடைக்கும் முட்டை மேலானது.
* நமக்குப் பாரமாக இருப்பவர்களை மன்னித்து விடலாம். நாம் பிறருக்குப் பாரமாக இருப்பது மன்னிக்க முடியாத குற்றம்.
* பொய்யன் வீடு தீப்பற்றி எரிந்தாலும், அச்செய்தியும் பொய்யாகிவிடும்.
* ரோஜாவையும் விரும்பு; அதன் முள்ளையும் நேசி.
* மூடின பாலில் ஈ விழாது.