என்ன செய்தார் சைதை துரைசாமி – 305
பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் வளாகத்தில் சிசிடிவி பொருத்தப்பட வேண்டும் என்று மேயர் சைதை துரைசாமி திட்டமிட்டார். அவரது இந்த ஆலோசனை அதிகாரிகள் மட்டத்திலும் ஊழியர்களிடமும் ஏதோ நகைச்சுவை போலவே முதலில் பேசப்பட்டது. குப்பை வளாகத்தில் கொண்டு போய் சிசிடிவி கேமரா வைத்து என்ன பார்க்க முடியும், எதற்காக இந்த வெட்டி வேலை என்றெல்லாம் சிலர் பேசினார்கள்.
இதுபோன்று பேசும் அனைவருக்கும் புரியும் வகையில் சிசிடிவி எதற்காக பொருத்தப்பட வேண்டும் என்பதை விளக்கினார் மேயர் சைதை துரைசாமி. குப்பை வளாகத்தில் குப்பை மட்டும் கொட்டப்படுகிறதா அல்லது கட்டிடக் கழிவுகளை குப்பை என்று கொட்டுகிறார்களா என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். மேலும், ஒவ்வொரு லாரியும் எத்தனை முறை உள்ளே வந்து குப்பை கொட்டிவிட்டுச் செல்கிறது என்பது தெளிவாகத் தெரியவேண்டும்.
லாரியின் எண் பதிவாக வேண்டும் மேலும் அதில் எவ்வளவு குப்பை வந்து கொட்டப்பட்டது என்பதும் சிசிடிவி மூலம் அறிந்துகொள்ள முடியும். மேலும், குப்பையை சரியான இடத்தில் கொட்டுவதை கண்காணிப்பு கேமரா மூலம் அறிந்து, தேவையான உத்தரவுகள் பிறப்பிக்கவும் முடியும். நவீன விஞ்ஞானத்தைப் பயன்படுத்தவில்லை என்றால் முன்னேற முடியாமல் போய்விடும் என்று தெளிவாக விளக்கினார் மேயர் சைதை துரைசாமி.
அதன் பிறகே, குப்பை வளாகத்திற்குள் சிசிடிவி பொருத்துவதால் இத்தனை நன்மை கிடைக்குமா என்பது அத்தனை பேருக்கும் தெரியவந்தது. இந்த வகையில் பெருங்குடி, கொடுங்கையூர் வளாகத்தை அடுத்த கட்டத்துக்கு உயர்த்தியவர் மேயர் சைதை துரைசாமி. மேலும், இங்கு பங்கர் அமைத்து தொழிற்பூங்காவாக மாற்ற வேண்டும் என்று கனவு கண்டார் மேயர் சைதை துரைசாமி.
- நாளை பார்க்கலாம்.