• Home
  • அரசியல்
  • விஜய் மாநாட்டு பாடலில் சூப்பர் ட்விஸ்ட்

விஜய் மாநாட்டு பாடலில் சூப்பர் ட்விஸ்ட்

Image

அதிர்ச்சியில் ரசிகர்கள்

தமிழக வெற்றிக் கழக மாநாடு மிகப்பிரமாண்டமாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நேரத்தில், அவரது மாநாட்டுக்கு ஆட்களை வரவழைப்பதற்கு ஒரு பாடல் வெளியாகியிருக்கிறது. விஜய் ஆதரவுடன் விஷ்ணு வெளியிட்டிருக்கும் இந்த பாடல் செம வரவேற்பு பெற்றுள்ளது.

இந்த பாடலில், ’யானை பலம் கொண்டு வாகை மலர் கொண்டு சேனை படை நடத்தி சேர்ந்த படை நகர்த்தி தலைவனாய் தளபதி அழைக்கிறார். அண்ணன் அழைக்கிறார், நாளை ஆள அழைக்கிறார்’ என்று பாடல் தொடங்குகிறது. இந்த பாடலில் ஆளும் தி.மு.க.வை மிரட்டுவது போன்று சில வரிகள் இருக்கின்றன.

குறிப்பாக, வெள்ளம் வந்தால் நீந்தி வாழ்ந்திடும், வானம் பார்த்தால் வாழ்க்கை தொலைந்திடும், சங்கம் வைத்தால் சாடியும் கூறிடும் விடியல் கேட்டால் வெகுண்டு எழுந்திடும். கழகம் ஒரு புறம் என்று சமீபத்திய நிகழ்வுகளில் தி.மு.க.வின் கையாலாகத்தனத்தைச் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்.

அதேநேரம் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக, ‘புரட்சித்தலைவர் வழியில் அம்மாவின் அரசியல் பழகிடுவோம்’ என்று ஜால்ரா போட்டிருக்கிறார்கள். இந்த விஷயம் விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. தி.மு.க.வை விட அ.தி.மு.க.வை அதிகமாக எதிர்க்க வேண்டாமா என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

அதேநேரம், தற்குறி விஜய் கழகம் என்ற ஹேஸ்டேக்கை உடன்பிறப்புகள் டிரெண்ட் செய்து விஜய்யை காய்ச்சி எடுக்கிறார்கள்.

Leave a Comment