இப்படி பண்றீங்களேப்பா
கடந்த 2019ம் ஆண்டு 27 மாவட்டங்களுக்கு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலம் வரும் டிசம்பர் மாதத்தோடு முடிவுக்கு வருகிறது. இந்த மாவட்டங்களில் உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு ஸ்டாலின் விரும்பவில்லை என்று வரும் செய்தி தி.மு.க.வினரை குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
இது குறித்துப் பேசும் தி.மு.க.வினர், ‘’27 மாவட்டங்களுக்கு பதவிக்காலம் முடிவுக்கு வந்தாலும் புதிதாக உருவாக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களைச் சேர்ந்த உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் 2026ல்தான் முடிவுக்கு வருகிறது. எனவே இப்போது இந்த மாவட்டங்களுக்கு மட்டும் தேர்தல் நடத்தினால் நிச்சயம் ஜெயிக்க முடியும் என்று ஸ்டாலினிடம் கூறப்பட்டது.
அதற்கு அவர், ஒட்டுமொத்தமாக எல்லா உள்ளாட்சி அமைப்புகளையும் கலைத்துவிட்டு, ஒரே கட்டமாகத் தேர்தலை நடத்துவதே சரியாக இருக்கும் அல்லது தேர்தல் நடத்தவே வேண்டாம். 2026ம் ஆண்டு ஜெயித்து ஆட்சிக்கு வந்த பிறகு நடத்தலாம் என்று இரண்டு யோசனையைக் கூறி இருக்கிறார். இப்போது உள்ளாட்சித் தேர்தல் நடத்தினால் தேவையற்ற கூட்டணிக் குழப்பம் வரும், ஜெயித்துவிடலாம் என்றாலும் தொடர்ந்து தி.மு.க.வுக்கு ஓட்டு போட்டுக்கொண்டே இருக்கிறோம் என்று மக்கள் நினைத்துவிடக் கூடாது என்று கருத்து கூறியிருக்கிறார்.
ஆகவே, ஜனவரி மாதம், ஒட்டுமொத்தக் கலைப்பு செய்ய இருக்கிறார். இதை எதிர்த்து நீதிமன்றம் செல்வார்கள். அதை காரணம் காட்டி உள்ளாட்சித் தேர்தலை முழுமையாகத் தள்ளி வைக்கலாம் என்று பிளான் போடுகிறார்’’ என்கிறார்கள்.
தேர்தல் நடத்தலைன்னாலும் குழப்பம் வருமே பாஸ்