• Home
  • அரசியல்
  • மோடிக்கு எதிராக ஸ்டாலின் உண்ணாவிரதப் போராட்டம்..?

மோடிக்கு எதிராக ஸ்டாலின் உண்ணாவிரதப் போராட்டம்..?

Image

கருணாநிதி வழியில் அடுத்த அட்டாக்

மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசுக்கும் தி.மு.க.வுக்கும் ஏழாம் பொருத்தமாக இருக்கிறது. கடந்த இரண்டு தேர்தல்களிலும் எக்கச்சக்க எம்.பி. சீட் மக்கள் அள்ளிக் கொடுத்திருக்கிறார்கள். ஆனாலும், ஸ்டாலின் வாய்ப் பேச்சில் மட்டுமே வல்லவராக இருக்கிறாரே தவிர, நேரடியாகப் போராட்டம் எதுவும் நடத்துவதில்லை.

வரி கொடுக்க மாட்டோம் என்று சொல்வதற்கு ஒரு நொடி போதும் என்று வீராவேசமாகப் பேசுவதோடு சரி. மத்திய அரசுக்கு எதிராக எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். தமிழகத்துக்கு நிதி தரமாட்டோம் என்று மத்திய அரசு அமைச்சர் பேசிய பிறகும் ஸ்டாலின் அமைதியாகவே இருக்கிறார்.

இவை தவிரவும் தொடர்ந்து ஸ்டாலின் அமைதியே காக்கிறார். இது குறித்து தி.மு.க.வினர், ‘’ஒரு முறை கூட நாம் கொடுக்கும் வரிக்கு உண்டான நிதியை பாஜக ஒதுக்கவில்லை, ஏன் இன்னும் இந்த பாஜகவையும் ஒன்றிய அதிகாரத்தையும் பணிய வைக்கும் அளவிற்க்கான தீவிரமான எந்த ஒன்றிய எதிர்ப்பு போரட்டத்தையும் முன்னெடுக்கவில்லை.

ஒன்றிய அரசை எதிர்க்கும் சக்தி நம்மிடம் உண்டு ஆனால் ஏன் ? இன்னும் இந்த மக்கள் ஒருங்கிணைப்பு போராட்டம் சாத்தியமாகமல் இருக்கிறது. நீட் துவங்கி புதிய கல்விக் கொள்கை வரை தொடர்ந்து துரோகம் இழைக்கும் ஒன்றிய அரசின் தமிழக கிளையை தமிழ் நாட்டில் வைத்திருக்கலாமா ? தமிழர்களை நசுக்கும் பாஜகவில் தமிழர்கள் இருக்கலாமா ?

மாநில சுயாட்சி என்பது இன்று நசுக்கப்பட்டு இருக்கும் இடமில்லாமல் ஆக்கப்பட்டு விட்டது என்பதை நாம் மறுக்க முடியுமா ?? இந்த நேரத்தில் ஒரே மனதாக ஆட்சியாளர்கள் தமிழக தன்னுரிமை அதிகாரம் கோரும் போரட்டத்தை வலுப்படுத்த வேண்டும் இதை செய்யாமல் எந்த விடிவும் பிறக்காது நம் நாட்டு மக்களுக்கு இதெல்லாம் தெரியாது நீங்கள் தான் மக்களிடம் இதை கொண்டு செல்ல வேண்டும் இது ஒன்றிய அரசின் வீழ்ச்சிக்கு நம் முன்னோர்கள் செயல்படுத்திய போராட்ட யுக்தி அதை நீங்கள் கையில் எடுக்க வேண்டும்,

ஸ்டாலின் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கி நிதியைப் பெற்றுத்தர வேண்டும். மேடைப் பேச்சு, ஹேஷ்டேக் மோதல் என்பதெல்லாம் தமிழ்நாட்டுக்கு உதவாது.

Leave a Comment