• Home
  • அரசியல்
  • இளைஞர்களுக்கு ஸ்டாலின் சொன்ன நல்ல செய்தி

இளைஞர்களுக்கு ஸ்டாலின் சொன்ன நல்ல செய்தி

Image

75 ஆயிரம் வேலை ரெடி

இன்று சட்டப்பேரவையில் அடுத்த ஆண்டு 75 ஆயிரம் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் செய்த அறிவிப்பு பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

இன்று சட்டப்பேரவையில் அவர் பேசுகையில், ‘’திமுக அரசு பொறுப்பேற்றது முதல் கடந்த 3 ஆண்டுகளில் தேர்வு முகமைகள் வாயிலாக 32,774 இளைஞர்கள், உள்ளாட்சி அமைப்புகள், அரசு துறை நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் 32,709 இளைஞர்கள் என மொத்தம், 65,483 இளைஞர்கள் அரசுப் பணி நியமனங்கள் பெற்றுள்ளனர்.

தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் அமைப்பு சார்ந்த தனியார் துறைகளில் 77,78,999 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது; நா முதல்வன் திட்டம் மற்றும் தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத் துறையின் மூலமாக நடத்தப்பட்ட சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் மூலமாக மொத்தம் 5,08,055 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அடுத்த 18 மாதங்களில் 75,000-க்கும் மேற்பட்ட அரசுப் பணியிடங்கள் உங்களுக்காக உருவாகிறது. உங்களது திறனும் அர்ப்பணிப்புணர்வும் அரசு நிர்வாகம் சிறப்பாகச் செயல்பட பங்களிக்க வேண்டும். வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்’’ என்று தெரிவித்தார். மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தொகுதி-I-க்கான பணிகளில் 21 துணை ஆட்சியர்கள், 26 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 25 உதவி ஆணையர்கள் (வணிக வரிகள்), 13 கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர்கள், 7 உதவி இயக்குநர் (ஊரக வளர்ச்சி) மற்றும் 3 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் என மொத்தம் 95 பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 14 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை ஸ்டாலின் வழங்கினார்.

Leave a Comment