குழந்தைகள் பாதுகாப்புக்கு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 182

மேயர் சைதை துரைசாமியின் முயற்சியினால், பூங்காவில் துருப்பிடிக்காத ஸ்டெயின்லெஸ் ஸ்டீலுக்கு மாற்றப்பட்ட விளையாட்டு உபகரணங்களுக்கு பெற்றோர்களிடமிருந்து மிகப்பெரிய பாராட்டு கிடைத்தது. அதோடு பூங்காவில் இருக்கும் நடைபாதை, உடற்பயிற்சி கூடங்களிலும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பயன்படுத்தி பாதுகாப்புக்கு வழி வகுத்தார். இந்த புதுமையை சாலை மற்றும் ரோடுகளிலும் புகுத்தி பொதுமக்களுக்குப் பாதுகாப்பு கொடுத்ததை பின்னர் பார்க்கலாம்.  

பூங்காவில் நிறைய மாற்றங்கள் முன்னெடுத்த நேரத்தில், யாரும் யோசிக்காத ஒரு விஷயத்தில் மேயர் சைதை துரைசாமி கவனம் செலுத்தினார். அதாவது, பூங்காவின் நுழைவாயில் குழந்தைகளுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் சுழல் கேட், குழாய் பாதை போன்றவைகள் அமைக்கவே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்தது. அப்போது தான், ‘இந்த பூங்காவுக்கு மாற்றுத்திறனாளிகளும் வந்துசெல்ல வேண்டும். எனவே, வாசல் படிக்கட்டாக மட்டும் இல்லாமல் சாய்தள நடைமேடையாகவும் இருக்க வேண்டும்’ என்று அறிவுறுத்தினார். மாற்றுத் திறனாளிகளும் பூங்காவில் மூன்று சக்கர வாகனங்களில் நுழைவதற்கும் உலா வருவதற்கும் வழி வகுத்தவர் மேயர் சைதை துரைசாமி தான்.

பூங்காவில் நுழைவதற்கு யாருக்கும் எந்தத் தடையும் இருக்கக்கூடாது என்று நினைத்தது மட்டுமின்றி, பூங்காவின் பயன்பாடு அனைவருக்கும் முழுமையாகவும் கூடுதல் நேரமும் கிடைக்கவேண்டும் என்று விரும்பினார். ஏனென்றால் தினமும் கிட்டத்தட்ட 8 மணி நேரம் மட்டுமே பூங்காக்கள் திறக்கப்பட்டிருந்தன. மேயராக சைதை துரைசாமி பதவிக்கு வந்த நேரத்தில், காலை 5 மணிக்கு திறக்கப்படும் பூங்கா பகல் 10 மணிக்கு மூடப்பட்டு மீண்டும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே செயல்பட்டது.

இந்த நடைமுறையில் அதிரடி மாற்றம் கொண்டுவந்தார் மேயர் சைதை துரைசாமி. அதன்படி காலை 5 மணிக்கு திறக்கப்படும் பூங்கா இரவு 9 மணிக்குத்தான் மூடப்பட்டது. மதிய இடைவேளை இல்லாமல் முழுமையாக செயல்பட்டதால் ஏராளமான பொதுமக்கள் பயன்பெற முடிந்தது. மேலும் பூங்காவிற்கு வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதியளிக்கும் வகையில் காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர். அதனால் பாதுகாப்பு பற்றிய அச்சம் இல்லாமல் குழந்தையுடன் பெண்கள் பூங்காவுக்கு வருவதும் கூடுதல் நேரம் இருப்பதும் சாத்தியமானது. ஒரு பூங்காவில் இத்தனை மாற்றங்களா என்று எல்லோரும் வியந்து பாராட்டும் அளவுக்கு மேயர் சைதை துரைசாமியின் திட்டங்கள் எல்லாமே பொதுமக்களுக்கு அதிக பயனளிப்பவையாக இருந்தன.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment