• Home
  • அரசியல்
  • டாக்டர் அபிநயாவுக்குப் போட்டி ஸ்ரீமதியின் தாயார்

டாக்டர் அபிநயாவுக்குப் போட்டி ஸ்ரீமதியின் தாயார்

Image

விக்கிரவாண்டியில் யாருக்கு மூன்றாவது இடம்

விக்கிரவாண்டி தொகுதியில் அ.தி.மு.க. போட்டியிடமல் விலகிக் கொண்டது. அதனால் மூன்றாம் இடத்தை எளிதில் தட்டிப் பறிக்கலாம் என்று நினைத்த நாம் தமிழர் வேட்பாளருக்குப் போட்டியாக களம் இறங்கியிருக்கிறார் ஸ்ரீமதியின் தாயார்.

கடந்த 2022வது வருஷம் ஜூலை மாசம் 13ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் குனியாமுத்தூர்ல ஒரு தனியார் பள்ளியில மர்மமான முறையில உயிரிழந்தவர் 17 வயது மாணவி ஸ்ரீமதி. அவரது மர்ம மரணமும் அதன் பிறகு நடந்த கலவரமும் தமிழகத்தையே உலுக்கியது.

ஜஸ்டிஸ் ஃபார் ஸ்ரீமதி என்று குரல் கொடுத்த அத்தனை பேரும் இப்போது அடுத்தடுத்த பரபரப்புக்கு நகர்ந்துவிட்டார்கள். இன்னமும் ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்கும் என்று போராடிக்கொண்டிருக்கும் ஸ்ரீமதியின் தாயார், அந்த வழக்கை மக்கள் மறந்துவிடக் கூடாது என்பதற்காகவே தேர்தலில் நிற்கிறாராம்.

தற்போது தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவாவும், பாஜக கூட்டணியில் பா.ம.க. சார்பில் சி.அன்புமணியும் எதிரெதிரே களம் காண்கிறார்கள். இந்த நிலையில் இன்று பெரிய கூட்டத்தைக் கூட்டி நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் அபிநயாவும் வேட்புமனு தாக்கல் செய்தார்.

இப்போது மூன்றாவது இடத்துக்குத்தான் கடுமையான போட்டி.

Leave a Comment