• Home
  • அரசியல்
  • மோடிக்கு இலங்கை அரசு பயப்பட மாட்டேங்குதே

மோடிக்கு இலங்கை அரசு பயப்பட மாட்டேங்குதே

Image

திரும்பத் திரும்ப மீனவர்களை கைது செய்றாங்க

மீண்டும் மீண்டும் இலங்கை அரசு தமிழக மீனவர்களை கைது செய்துகொண்டே இருக்கிறார்கள். முதல்வர் ஸ்டாலின் இது குறித்து எத்தனை முறை கடிதம் அனுப்பினாலும் நோ ரெஸ்பான்ஸ். தமிழக மீனவர்களை விடுவிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படுவதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியிருக்கும் நேரத்தில் மீண்டும் 22 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இதற்கு பல்வேறு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அன்புமணி ராமதாஸ் இதுகுறித்து, ‘’மேலும் 22 தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையால் கைது: அத்துமீறலுக்கு முடிவே இல்லையா? இராமேஸ்வரம் தனுஷ்கோடியில் இருந்து வங்கக்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 25 மீனவர்களை அவர்களின் நாட்டுப்படகுகளுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். நாட்டுப்படகு மீனவர்களால் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் செல்ல முடியாது என்பது நன்கு தெரிந்தும், அவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்ததாகக் கூறி சிங்களக் கடற்படையினர் கைது செய்திருக்கின்றனர். இலங்கை கடற்படையினரின் இந்த அத்துமீறல் கண்டிக்கத்தக்கது.

கடந்த ஜூன் மாதம் 17-ஆம் தேதி தொடங்கி நேற்று வரையிலான இரு வாரங்களில் மட்டும் மொத்தம் 61 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அவர்களில் 10 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளது. தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 166 விசைபடகுகளை பறிமுதல் செய்திருக்கிறது. இலங்கைக் கடற்படையினரின் இத்தகைய அட்டகாசத்தை தடுக்க வேண்டும் என்று பலமுறை மத்திய அரசை வலியுறுத்தியும் இதே நிலை தொடருவது கவலையளிக்கிறது. மத்திய அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் விடுதலை செய்யவும், அவர்களின் படகுகளை மீட்டுத் தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காணவும் மத்திய அரசு முன்வர வேண்டும்’’ என்று கேட்டிருக்கிறார்.

மோடியைக் கண்டு எல்லா நாடும் அச்சப்படுகிறது என்று சொல்லப்படும் நிலையில், இலங்கை அரசு கொஞ்சமும் மதிக்காமலே இருக்கிறதே.

Leave a Comment