நிறம் மாறும் வானம்

Image

கவித்துவம்

நினைத்துக் கொண்டாற்போல

உடைத்துக்கொண்டு

அழுதுவிடுவதற்கும்….

அழுதுதீர்த்த பின்

துடைத்துக் கொண்டாற்போல

வெளுத்துவிடுவதற்கும்…

இயல்பாகிவிடுகிறது வானத்துக்கு.

மானத்தைக் கட்டிக்கொண்டு

அழும் உன்னாலும் என்னாலும் தான்

ஒருநாளும் முடிவதில்லையது.

  • அன்பு

Leave a Comment