கவித்துவம்
நினைத்துக் கொண்டாற்போல
உடைத்துக்கொண்டு
அழுதுவிடுவதற்கும்….
அழுதுதீர்த்த பின்
துடைத்துக் கொண்டாற்போல
வெளுத்துவிடுவதற்கும்…
இயல்பாகிவிடுகிறது வானத்துக்கு.
மானத்தைக் கட்டிக்கொண்டு
அழும் உன்னாலும் என்னாலும் தான்
ஒருநாளும் முடிவதில்லையது.
- அன்பு