குப்பை மேலாண்மைக்கு சிங்கப்பூர் மாடல்

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 353

சென்னையின் அழகுக்கு திருஷ்டிப்பொட்டு போன்று திகழும் கூவம், அடையாறு போன்ற ஆறுகளை எந்த வகையில் சீரமைக்க முடியும் என்பதை மேயர் சைதை துரைசாமி மிகவும் தெளிவாக அறிந்துகொண்டார். அதேநேரம், சென்னைக்கு பெரும் சவாலாகத் திகழும் குப்பை மேலாண்மை குறித்தும் சிங்கப்பூர் மாடலை அறிந்துகொள்வதற்கு ஆர்வம் காட்டினார்.

மேயர் மாநாட்டுக்கு வந்த ஒரு மேயர், எந்த பொழுதுபோக்கு பயணத்திலும் ஈடுபடாமல் சொந்த ஊரின் மேன்மைக்காக ஆலோசனைகள் கேட்கிறார் என்றதும் சிங்கப்பூர் அதிகாரிகள் மகிழ்ச்சியுடன் மேயர் சைதை துரைசாமிக்கு உதவி செய்ய முன்வந்தனர். தூய்மையில் உலகுக்கே எடுத்துக்காட்டாக சிங்கப்பூர் எப்படி மாறியது என்பது குறித்து தெளிவாக விளக்கம் அளித்தார்கள்.

சிங்கப்பூர் நாட்டில் 3 ஆர் – எனப்படும் கொள்கை குப்பை மேலாண்மைக்குக் கடைப்பிடிக்கப்படுகிறது. மூன்று ஆர் என்பது Reduce, Reuse, Recycle. அதாவது குப்பைகளைக் குறைத்தல், மறுபடியும் பயன்படுத்துதல் மற்றும் மறுசுழற்சி ஆகிய மூன்றையும் கொள்கைகளாகக் கடைப்பிடித்து பள்ளி, வீடு, அலுவலகம் என எல்லா இடங்களிலும் விழிப்புணர்வு ஊட்டப்பட்டது. வீடு, அலுவலகங்களில் குப்பையை பிரித்துக் கொடுப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளன.

சிங்கப்பூரில் நேரடியாக குப்பையை மண்ணில் புதைப்பதில்லை. முதலில் குப்பையை எரித்து, அதன் அளவை கிட்டத்தட்ட 90% வரை குறைக்கிறார்கள். இப்படி எரிக்கப்படும் குப்பை மூலம் மின்சாரம் எடுக்கிறார்கள். இதை எல்லாம் தாண்டி விஞ்சும் குப்பைகளை மட்டுமே மண்ணுக்குள் புதைக்கிறார்கள். செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு தீவில் குப்பைகள் புதைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பொதுமக்களுக்கு குப்பையால் எந்த தொந்தாவும் கிடையாது. அரசாங்கத்திற்கு மக்களும் முழு ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள்.

இவற்றை எல்லாம் தானே நேரில் சென்று பார்வையிட்டார் மேயர் சைதை துரைசாமி.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment