• Home
  • கவித்துவம்
  • சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் புதுக்கவிதைகள்

சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் புதுக்கவிதைகள்

Image

கவிதைகள் என்றாலே புதுமை, இளமை மட்டும்மல்ல இனிமையும் தான். புன்னகைக்கவும் சிந்திக்கவும் வைத்த அட்டகாசமான சில பிரபல கவிதைகள்.  

“ரேசன் கடைக்காரருக்கு

குழந்தை பிறந்தது….

எடை குறைவாக…!”

…………………..

“வராந்தாவிலேயே

இருந்த

வயதான தந்தை….

இறந்த பின்

ஹாலுக்குள் வந்தார்

புகைப்படமாய்…!”

………………..

“வீட்டின் பெயரோ

அன்னை இல்லம்..!

அன்னை இருப்பதோ

முதியோர் இல்லம்..!”

……………………..

’புறாக்கள் வளர்க்கும்

எதிர் வீட்டுக்காரர்

என்னிடமிருந்து பறிக்கிறார்

பூனை வளர்க்கும்

சுதந்திரத்தை….”

– நா. முத்துக்குமார்.

……………

’’பறித்த மலரை

ஆண்டவனுக்குச் சூட்டினாலென்ன?

கல்லறையில் வைத்தாலென்ன?

மலருக்கென்னவோ

பறித்ததுமே வந்துவிட்டது

மரணம் ! “

………………….

“சர்க்கரை இல்லை…

கொழுப்பு இல்லை…

எஜமானரோடு

வாக்கிங்

போகுது

ஜிம்மி…!”

……………….

“வேலிக்கு வெளியே

தலையை நீட்டிய என்

கிளைகளை வெட்டிய

தோட்டக்காரனே…!

வேலிக்கு அடியில்

நழுவும் என் வேர்களை

என்ன செய்வாய்…?”

— மு. மேத்தா.

……………………….

“ஒவ்வொரு முறையும் அவன் அவளை

பிறந்த வீட்டுக்கு அனுப்பும் போதெல்லாம்

திரும்பவும் அவர்களை

ஒன்று சேர்த்து வைக்கிறது

ஹோட்டல் சாம்பார்!”

  • எஸ். செல்வகுமார்

………………….

“பேருந்தில்

சிதறுகிறது நாணயங்கள்….

தேடலுக்குப்பிறகு

கிடைத்தன….

சில நாணயங்கள்

தொலைந்தன…

சிலர் நாணயங்கள்…!”

  • ப. உமா மஹேஸ்வரி

……………………….

“பேற்றின் வலியோடு

அலறும் குரலில்

இணைந்தே ஒலிக்கிறது

என் நிர்வாணத்துக்கான

அழுகையும்…!”

– அ. வெண்ணிலா.

…………………..

“கோழித்திருடனை

ஜெயில்ல போட்டாங்க…

ஜெயில்ல அவனுக்கு

கோழிக்கறி போட்டாங்க..!”

  • ஒப்பிலான்.

…………………….

“மாங்கல்யத்தின் மகிமையை

மனைவி அறிவாள் …

மணவாளன் அறிவான் …

அவர்கள் இருவரையும் விட

மார்வாடியே

அதிகம் அறிவான்…!’

— கவிஞர் தமிழன்பன்.

…………………

“காற்றில் பறந்து

பறவை மறைந்த பிறகும்

கிளை தொடங்கிய

நடனம் முடியவில்லை !”

– நா. முத்துக்குமார்.

……………..

Leave a Comment