என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 54
அக்டோபர் 1, 1972. ‘எம்.ஜி.ஆர். மன்றங்களுக்கு தனிக்கொடி அடையாளம் தேவையில்லை’ என்று அறிவித்துவிட்டு கிளம்பிய புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரிடம் தைரியமாக முன்வந்து தன்னுடைய ஆதங்கத்தைக் கொட்டினார் சைதை துரைசாமி.
எம்.ஜி.ஆர். மன்றங்களுக்கும் எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கும் திட்டமிட்டு நிகழ்த்தப்படும் அரசியல் சூழ்ச்சிகளை ஆதாரத்துடன் வெளிப்படையாகப் பேசினார். சுமார் 4 நிமிடங்கள் அவற்றைக் கேட்டுக்கொண்ட புரட்சித்தலைவர், ‘சரி, நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்று கிளம்பினார்.
வீட்டுக்குப் போனதும் சைதை துரைசாமி கூறிய தகவல்களின் உண்மைத்தன்மை குறித்து விசாரிக்கத் தொடங்கினார். வரிசையாக அவருக்குக் கிடைத்த தகவல்கள் எல்லாமே அதிர்ச்சி ரகம். சைதை துரைசாமி கூறியதை விட மிகப்பெரிய சூழ்ச்சி தன்னைச் சுற்றி நடப்பதை அறிய நேர்ந்தது.
தன்னை வைத்து கட்சியைப் பலப்படுத்திக்கொண்டவர்கள், இப்போது தன்னை வைத்தே சூழ்ச்சிகள் செய்வதையும் தெளிவாக அறிந்துகொண்டார். இதன் பிறகும் அமைதி காப்பது தன் ரசிகர்களுக்கும் தன்னை நம்பி வாக்களித்த மக்களுக்கும் அநீதி என்ற முடிவுக்கு வந்தார்.
அதனால், அன்றைய தினமே அக்டோபர் 8ம் தேதி திருக்கழுக்குன்றத்தில் அண்ணா சிலை திறப்பு விழாவிற்கும், அதே நாள் இரவு லாயிட்ஸ் காலனி பொதுக் கூட்டத்திற்கும் தேதி கொடுத்துவிட்டார்.
பரூக் மரைக்காயர் மூலம் சமாதானம் ஆகியிருந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., அன்றைய தினமே இரண்டு பொதுக்கூட்டங்களில் பேசுவதற்கு தேதி கொடுத்ததற்குக் காரணம், சைதை துரைசாமி.
அந்த கூட்டங்களில் என்ன நடந்தது.?
- நாளை பார்க்கலாம்.