கூவம் நதியில் கழிவு நீர் பாதை அடைப்பு 

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 373

கூவம் நதியை சீர்படுத்துவது மட்டுமின்றி, ஆற்றங்கரையை அனைவரும் பயன்படுத்தும் வகையில் சிறப்புற வடிவமைப்பதிலும் மேயர் சைதை துரைசாமி அதிக கவனம் செலுத்தினார். நதிக்கரையை ஒட்டிய இடங்களை பயன்படுத்தவில்லை என்றால் மீண்டும் ஆக்கிரமிப்பு சிக்கல் ஏற்படுவதற்கு வாய்ப்பு என்பதையும் கணித்தே சிறப்புத் திட்டங்கள் வகுக்கப்பட்டன.

அதன்படி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையுடன் இணைந்து கூவம் நதியின் இரு பக்கமும் கட்டிடக் கழிவுகள் மற்றும் திடக் கழிவுகள் அகற்றும் பணி, கூவம் நதியின் இரு கரைகளின் எல்லையிலும் சுற்றுச் சுவர் அமைக்கும் பணி திட்டமிடப்பட்டது. அதோடு, கூவம் நதியின்  கரையோரம் உள்ள அதிகப்படி இடங்களில் செடிகள், சிறு  புற்சாலைகள்  அமைக்கும் பணியும் வடிவமைக்கப்பட்டது.

கூவம் திட்டம் நீண்ட காலத்துக்குப் பயன்பட வேண்டுமென்றால், எதிர்காலத்திலும் அசுத்தம் ஆற்றில் கலக்கக்கூடாது. எனவே, சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் மூலம் புதியதாக பாதாள கழிவு நீர் குழாய்கள்  அமைத்து, அவற்றை ஓரிடத்தில்  சேர்க்கும் பணி திட்டமிடப்பட்டது. இதில் குறிப்பாக  கூவம்  நதியில் விடப்பட்டுள்ள கழிவுநீர் பாதைகளை அடைக்கும் பணிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

எத்தனை சுத்திகரிப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் மீண்டும் மீண்டும் கழிவு நீர் கூவம் நதியில் சேர்கிறது என்றால் சுத்திகரிப்பு செய்வதால் எந்த பயனும் ஆவப்போவதில்லை. எனவே, கழிவு நீர் பாதைகளை முழுமையாகக் கண்டறிந்து, அவற்றை நிரந்தரமாக அடைப்பதற்குத் திட்டமிடப்பட்டது. அதேநேரம், கழிவு நீர்களை வெளியேற்றுவதற்கு புதியதாக பாதாள கழிவு நீர் குழாய்களை   ஓரிடத்தில்  சேர்க்கும் பணி திட்டமிடப்பட்டது. அதோடு, புதியதாக கழிவு நீர் சுத்திகரிக்கும் நிலையம் அமைக்கும் பணியும் முக்கியத்துவம் பெற்றது.

கழிவு நீரை முழுமையாக சுத்திகரித்து கடலில் கலக்கவிடுவதால் ஆறு மட்டுமின்றி கடலும் பாதுகாக்கப்படும் என்று திட்டமிட்டார் மேயர் சைதை துரைசாமி.

– நாளை பார்க்கலாம்.

Leave a Comment