கூவத்தை சீர்படுத்துவதற்கு ஏழு துறைகள்

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 362

சிங்கப்பூர் நாட்டு பிரதமரால் அந்த நாட்டின் நதிகளை சுத்தப்படுத்தி நீர்வழிப்பாதையாக மாற்ற முடியும் என்றால் நம்மாலும் கண்டிப்பாக முடியும் என்ற நம்பிக்கை மேயர் சைதை துரைசாமிக்கு இருந்தது. அது குறித்து சென்னை மாமன்றத்தில் பேசினார் சைதை துரைசாமி.

மாநகராட்சி மன்றத்தில் பேசிய சைதை துரைசாமி, ‘’சிங்கப்பூர் நாட்டில் கழிவுகளின் அடைக்கலமாய் இருந்த நீர்வழிப்பாதையை  அந்நாட்டின் பிரதமர்  லீ குவான் யூ எப்படி மாற்றி அமைத்து, அந்த  நீர்வழிப்பாதையைக் காணவே சிங்கப்பூர் செல்ல வேண்டும் என்ற நிலையை உருவாக்கினார்களோ, அதே நிலையை சென்னை மாநகருக்கும், கூவம் நதிக்கும் உருவாக்கிட, தொலை நோக்குப் பார்வையோடும், தேர்ந்த அறிவுத் திறனோடும், திடம் கொண்ட சிந்தனையோடும் மாண்புமிகு அம்மா அவர்கள் கூவம் நதி சீரமைப்புத் திட்டத்தை முனைப்புடன் செயல்படுத்திட முனைந்துள்ளார்கள்.

முன்னர் இருந்த ஆட்சியும் கூவத்தை சீர்படுத்துகிறோம் என்று சொல்லி திட்டங்கள்  வகுத்தன. ஆனால் அவை அத்தனையும் ஆரம்ப நிலையிலே முனை முறிந்து மூளியாகிப் போயின. காரணம், சரியாக திட்டமிடப்படாமையே ஆகும்.

ஆனால், சிந்தனை ஆற்றலும், செயலாற்றலும் ஒருங்கே குடி கொண்டுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்,  பற்பல ஆண்டுகளாய் பாழ்படுத்தப்பட்ட கூவம் நதியை சீரமைப்பது என்பது ஓரிரு நாட்களில் முடியக் கூடிய செயல் அல்ல என்பதால், எந்தெந்தப் பணிகளை என்னென்ன வகையில் செய்து, கூவம் சீரமைப்பை வெற்றிகரமாய் நிறைவேற்றலாம் என்று சரியான முறையில் திட்டமிட்டு அதற்கான செயல் திட்டத்தை வகுத்துத் தந்திருக்கிறார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வகுத்துத் தந்துள்ள செயல் திட்டத்தின்படி, கூவம் நதியை முழுமையாக சீரமைத்திட, பொதுப்பணித்துறை, சென்னை மாநகராட்சி நகராட்சி நிர்வாக ஆணையரகம், ஊரக வளர்ச்சி இயக்குநரகம், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம்,  சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு குடிசைமாற்று  வாரியம் ஆகிய ஏழு அரசு துறை மற்றும் நிறுவனங்கள் இணைந்து செயல்படும்…’’என்று அறிவித்தார்.

இந்த அறிவிப்பு அத்தனை பேரையும் அசர வைத்தது.

Leave a Comment