• Home
  • அரசியல்
  • செந்தில் பாலாஜி காலி. சவுக்கு சங்கர் ஜாலி

செந்தில் பாலாஜி காலி. சவுக்கு சங்கர் ஜாலி

Image

உச்ச நீதிமன்றத்தில் விறுவிறு திருப்பங்கள்

இன்று எப்படியும் செந்தில் பாலாஜி வழக்கில் ஆதரவான தீர்ப்பு வழங்கப்படும், அவர் ரிலீஸ் செய்யப்படுவார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், மீண்டும் விசாரணை நடத்தப்பட இருப்பதால் வழக்கு தள்ளிப் போகிறது.

அதேநேரம், இரண்டாம் முறையாக குண்டர் சட்டத்தில் சிக்கவைக்கப்பட்ட சவுக்கு சங்கர் அந்த வழக்கில் இருந்தும், அனைத்து வழக்குகளையும் ஒன்றாக விசாரிக்கவும் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்திருந்தார். இவருக்கு ஆதரவான தீர்ப்பு வந்திருக்கிறது.

செந்தில் பாலாஜி பிணை கோரிய வழக்கின் மீதான விசாரணை அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்க பட்டியலிடப்பட்டிருந்தது செந்தில் பாலாஜிக்கு எதிரான மூன்று மூல வழக்குகள் மீது அமலாக்கத்துறை விசாரணை நடத்துமா போன்ற கேள்விகளை எழுப்பியிருந்தார்கள் இதற்கு பதில் அளிக்க அமலாக்கத்துறை சார்பில் கால அவகாசம் கோரியத்தை அடுத்து வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 20ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, மீண்டும் விசாரணை நடக்கும் பட்சத்தில் தீர்ப்பு இப்போதைக்கு வெளிவர வாய்ப்பு இல்லை.

அதேநேரம், இரண்டாவது முறையாக குண்டர் சட்டத்தில் சிக்கியிருக்கும் சவுக்கு சங்கருக்கு சவுக்கு சங்கருக்கு மீண்டும் இடைக்கால நிவாரணம் அளித்துள்ளது உச்ச நீதிமன்றம். அனைத்து வழக்குகளிலும் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. குண்டர் சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு விஷயங்களுமே தி.மு.க.வுக்கு கடும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

Leave a Comment