புதிய கல்விக் கொள்கைக்கு அங்கீகாரம்.
தேசிய கல்விக் கொள்கை என்பது கடந்த 1968-ம் ஆண்டு முதன்முதலில் உருவாக்கப்பட்டது. அதன்பின் 1976-ம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்தின் 42-வது திருத்தத்தின்படி கல்வி பொதுப் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
அதன்பின் கடந்த 1986-ம் ஆண்டு கல்விக் கொள்கை திருத்தப்பட்டது. அடுத்தாற்போல் 1992-ம் ஆண்டு கல்விக் கொள்கை திருத்தப்பட்டாலும் பெருமளவு மாற்றம் செய்யப்படவில்லை. அதன்பின் கடந்த 2016-ம் ஆண்டு மே 27-ம் தேதி டிஎஸ்ஆர் சுப்பிரமணியன் குழு கல்விக் கொள்கையில் சில திருத்தங்கள் செய்து தாக்கல் செய்தது. அதன் 2019-ம் ஆண்டு கஸ்தூரி ரங்கன் கல்விக் குழு தாக்கல் செய்துள்ளது. இதை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட 2020-ம் ஆண்டுக்கான புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஜூலை 29-ம் தேதி அன்று ஒப்புதல் அளித்தது. இன்று இந்த புதிய கல்விக் கொள்கைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த கொள்கைபடி என்னென்ன மாற்றங்கள் என்று பார்க்கலாம்.
கல்வி கட்டமைப்பு (5+3+3+4 சூத்திரம்)
5 ஆண்டுகள் – அடிப்படைக் கல்வி
நர்சரி (4 வயது)
ஜூனியர் KG (5 வயது)
சீனியர் KG (6 வயது)
வகுப்பு 1 (7 வயது)
வகுப்பு 2 (8 வயது)
3 ஆண்டுகள் – தயாரிப்புக் கல்வி
வகுப்பு 3 (9 வயது)
வகுப்பு 4 (10 வயது)
வகுப்பு 5 (11 வயது)
3 ஆண்டுகள் – மேல்நிலைக் கல்வி
வகுப்பு 6 (12 வயது)
வகுப்பு 7 (13 வயது)
வகுப்பு 8 (14 வயது)
4 ஆண்டுகள் – உயர்நிலைக் கல்வி
வகுப்பு 9 (15 வயது)
வகுப்பு 10 (SSC) (16 வயது)
வகுப்பு 11 (FYJC) (17 வயது)
வகுப்பு 12 (SYJC) (18 வயது)
4 ஆண்டு பட்டப்படிப்பு
கல்லூரி பட்டப்படிப்பு இனி 4 ஆண்டுகளாக இருக்கும்.
1 வருடம் படித்தால் சான்றிதழ்
2 வருடங்கள் படித்தால் டிப்ளமோ
3 வருடங்கள் படித்தால் பட்டம்
4 ஆண்டு பட்டப்படிப்பு முடித்தவர்கள் நேரடியாக 1 வருடத்தில் MA படிக்கலாம்.
சிறப்பம்சங்கள்
- 5வது வகுப்பு வரை தாய்மொழி, உள்ளூர் மொழி மற்றும் தேசிய மொழியில் கற்பித்தல். ஆங்கிலம் ஒரு பாடமாக மட்டும் கற்பிக்கப்படும்.
- 9வது முதல் 12வது வகுப்பு வரை செமஸ்டர் முறை அறிமுகப்படுத்தப்படும்.
- ஒரு படிப்பின் நடுவில் மற்றொரு படிப்பைத் தொடர விரும்பும் மாணவர்களுக்கு இடைவெளி எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படும்.
- 2035க்குள் உயர்கல்வியில் சேர்க்கை விகிதத்தை (GER) 50% ஆக உயர்த்துவது இலக்கு.
- கல்வி, நிர்வாக மற்றும் நிதி தன்னாட்சி உள்ளிட்ட பல சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்படும்.
- 12வது வகுப்பில் மட்டும் வாரியத் தேர்வு. 10வது வகுப்பு வாரியத் தேர்வு இனி கட்டாயமில்லை. MPhil நிறுவனங்கள் மூடப்படும்.
மொழி மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு
பிராந்திய மொழிகளில் மின்னூட்கள் (E-courses) அறிமுகப்படுத்தப்படும்.
மெய்நிகர் ஆய்வகங்கள் (Virtual Labs) உருவாக்கப்படும்.
தேசிய கல்வித் தொழில்நுட்ப மன்றம் (NETF) நிறுவப்படும்.
தமிழ்நாடு இந்த புதிய கல்விக் கொள்கையை ஏற்க முடியாது என்று அறிவித்திருக்கும் நிலையில் அடுத்து நீதிமன்றத்தை நாடுமா அல்லது போராட்டம் நடத்துமா என்று இன்னமும் முடிவு எடுக்கவில்லை. தமிழ்நாட்டு கல்வி முறை சிறப்பாக இருக்கும் நிலையில், இந்த பாடத்திட்டமே தொடரவேண்டும் என்று ஆளும் தி.மு.க. விரும்புகிறது.