போலீஸில் செல்வப்பெருந்தகை புகார்
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் இன்று போராட்டம் நடத்திவரும் நிலையில், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராகி ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருக்கிறார் அண்ணாமலை.
இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்துக்கு வந்த அண்ணாமலை, ‘’திமுக ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சீர்கேடை மறைக்கவும், திமுக பட்டத்து இளவரசர் மனதைக் குளிர வைக்கவும், அனைவரையும் அவதூறாகப் பேசி வரும், அறிவாலயத்தின் ஆர்.எஸ். பாரதி மீது, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளோம்.
ஆர்.எஸ்.பாரதி அவர்கள் பரப்பிய அவதூறுக்கு தகுந்த தண்டனையும் ரூபாய் ஒரு கோடி இழப்பீடும் கோரித் தொடர்ந்துள்ள இந்த வழக்கின் மூலம் கிடைக்கும் நிதி, கள்ளக்குறிச்சியில் போதைப் பொருள்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு மையம் அமைத்துப் பராமரிக்கப் பயன்படுத்தப்பட உள்ளது என்பதனைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
அதேநேரம், காங்கிரஸ் கட்சிக்கும் அண்ணாமலைக்கும் இடையில் கிரிமினல் போர் நடைபெற்றுவருகிறது. தமிழக பா.ஜ.க.வில் 261 குற்றவாளிகள் 1977 வழக்குகள்’ இருக்கிறது என்று ஒரு பட்டியலை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டிருந்தார்.
உடனே அதற்குப் பதிலடியாக செல்வப்பெருந்தகை மீது இருக்கும் வழக்குகளை பட்டியல் போட்டிருந்தார் அண்ணாமலை. செல்வப்பெருந்தகை மீதான குற்ற வழக்குகளை பட்டியல் போட்டிருக்கிறார்.
ஆடிட்டர் பாண்டியன் கொலை வழக்கு – முக்கிய குற்றவாளி 2001 வழக்கு எண் 24(A)/2001. சிபிஐ வழக்கு ஊழல் தடுப்புச் சட்டம் 1988, பிரிவு 13(2) r/w 13(1) (e) 2003வழக்கு எண் 136/2003இபிகோ 307 – கொலைமுயற்சி 2003வழக்கு எண் 138/2003 – தாக்குதல் 2003வழக்கு எண் 277/03 – கொலை மிரட்டல் 2003வழக்கு எண் 451/2003இபிகோ 324 – பயங்கர ஆயுதங்களால் தாக்குதல், இபிகோ 506 – கொலை மிரட்டல், வெடிபொருள்கள், 1908. இந்த வழக்கில், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
2008வழக்கு எண் 1464/2003 இபிகோ 147 – கலவரம் செய்தல், இபிகோ 148 – பயங்கர ஆயுதங்களால் கலவரம் செய்தல், இபிகோ 506 – கொலைமிரட்டல் கொலைமுயற்சி வழக்கு, கொலை மிரட்டல் வழக்கு, பயங்கர ஆயுதங்களால் தாக்கிய வழக்கு, பயங்கர ஆயுதங்களைப் பயன்படுத்திக் கலவரம் செய்த வழக்கு, வெடிபொருள்கள் வழக்கு, கொலை வழக்கு என பல வழக்குகள், சமூகத்தில் மோசமான குற்ற வழக்குகள்தான். குறிப்பாக, கொலை மிரட்டல் வழக்குகள் மட்டுமே மூன்று வழக்குகள் அவர் மீது தொடரப்பட்டிருந்தன’’ என்று அண்ணாமலை கூறியிருந்தார்.
இதையடுத்து பொய்யான குற்றச்சாட்டு கூறிவரும் அண்ணாமலை மீது புதிய போலீஸ் கமிஷனர் அருணிடம் செல்வப்பெருந்தகை புகார் அளிக்க இருக்கிறாராம். ஆட்டம் சூடு பிடிக்கிறது.