அதிரவைக்கும் வரலாற்று உண்மைகள்
இன்று, ‘தமிழக எல்லை மீட்புப் போராளி, தமிழ்ப்பேரறிஞர், ‘சிலம்புச்செல்வர்’ என்று தமிழின மக்களால் அன்போடு அழைக்கப்படுகிற பெருந்தமிழர் நமது ஐயா ம.பொ.சிவஞானம் அவர்களின் நினைவைப் போற்றுகிற நாள் இன்று. ‘தமிழரசுக் கழகம்’ நடத்தி, எங்களைப் போன்ற அடுத்தத் தலைமுறை தமிழ்ப் பிள்ளைகளுக்கு வழிகாட்டியாக வாழ்ந்த பெருந்தகைக்குப் பெருமிதத்தோடு நம் புகழ்வணக்கத்தைச் செலுத்துவோம்’’ என்று நாம் தமிழர் சீமான் பெருமிதம் காட்டியிருக்கிறார்.
பிரபாகரனின் பிள்ளைகள் என்று சொல்லிக்கொள்கிறார் சீமான். ஆனால், ம.பொ.சிவஞானத்துக்கும் பிரபாகரனுக்கும் ஏழாம் பொருத்தம் என்று பல்வேறு உண்மைகளை எடுத்துப் போட்டு அதிர வைக்கிறார்கள் உடன்பிறப்புகள். அந்த வகையில் மா.பொ.சி. உதிர்த்த சில அரசியல் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்கள்.
அதன்படி, ‘’ஈழத்தில் புலிகளையும் அப்பாவி மக்களையும் தமிழ் பெண்களையும் அவமதித்த இந்திய அமைதிப் படைக்கு ஆதரவாக ஜெயகாந்தனுடன் சேர்ந்து இந்திய அமைதி படை ஆதரவு கூட்டத்தை நடத்திவர் தான் இந்த “மபொசி”. அதேபோல் ஜெயகாந்தன் மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர் தா. பாண்டியனுடன் இணைந்து விடுதலை புலிகள் எதிர்ப்பு மாநாட்டை நடத்தியவர்.
அதேபோல் ராஜாஜி குல கல்வி திட்டத்தை கொண்டு வந்த பொது அதை எல்லாரும் எதிர்த்த போது இவர் மட்டும் ஆதரித்து பேசினார். சமஸ்கிருதம் நமது கலாச்சார மொழி என்று தமிழும் சமஸ்கிருதமும் என்ற அவர் நூலில் எழுதினார். இந்தி எதிர்ப்பின் போது இந்தி சொற்களின் மீது தார் பூசிய பெரியார் தொண்டர்களின் போராட்டத்தை கெடுக்கும் விதமாக தார் மீது மண்ணெண்ணெய் ஊற்றி அதை கெடுக்கும் நோக்கில் செயல்பட்டார்.
இப்படி எல்லா வகையிலும் புலிகளும் தமிழர்களுக்கும் எதிராக செயல்பட்ட ம.பொ.சி.யை சீமான் பாட்டன் என்று கூறுகிறார். குலக்கல்வி கொண்டுவந்த ராஜாஜியை மதுவிலக்குப் போராளி என்கிறார் திருமாவளவன். தமிழக அரசியல் எங்கேயோ போகிறது.