வருண்குமாருக்கு ஆதரவாக ஜோதிமணி
சீமான் பொதுவெளியில் திருச்சி வருண்குமார் எஸ்.பி. குறித்து எச்சரிக்கை விடுத்ததை அடுத்து அவரது தம்பிகள் வருண்குமார் மட்டுமின்றி அவரது மனைவி குறித்தும் அவதூறு கருத்துகள் பேசத் தொடங்கிவிட்டார்கள். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருண்குமார் கூறியதும், ‘’எனக்கும் அவனுகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை அது எல்லாம் பேக் ஐடி’’ என்று சீமான் எஸ்கேப் ஆகியிருக்கிறார்.
இந்த நிலையில் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, ‘’புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திருமிகு. வந்திதா பாண்டே IPS மற்றும் அவர்கள் குடும்பத்தினர் தொடர்பான ஆபாசமான, அருவருக்கத்தக்க,ஒரு நாகரிமான சமூகம் எவ்விதத்திலும் ஜீரணிக்கமுடியாத கமெண்ட்டுகளைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். (பொதுவெளியில் பதிவிட முடியாத அளவிற்கு ஆபாசமானவை) ஒரு பெண்,அவர் காவல்துறை அதிகாரியாக இருந்தாலும் அவரது மார்பையும், உடலையும் மட்டுமே பார்க்கிற,அவர் கண்ணியத்தைக் குலைக்கும் வகையில்,பொதுவெளியில் கொஞ்சமும் வெட்கமோ, பயமோ இல்லாமல் ஆபாசமாகப் பேசுகின்ற துணிச்சல் எப்படி வருகிறது? இதை எப்படி ஒரு நாகரிகமான சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிற சமூகம் அனுமதிக்க முடியும்?
அவரது கணவரை இழிவுபடுத்துவதாக நினைத்து,அவர் குடும்பத்துப் பெண்கள் ,குழந்தைகள் மீது ஆபாசத் தாக்குதலை, அச்சுறுத்தலைக் கட்டவிழ்த்து விடுவதை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு காவல்துறை அதிகாரிக்கும்,அவர் குடும்பத்திற்குமே இந்த நிலை என்றால் சாதாரண பெண்களின் நிலை என்ன? இதுபோன்ற இணைய,சமூக ஊடக,ஆபாசத்தாக்குதலால், எவ்வளவோ பெண்களும், அவர்கள் குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு காவல்துறை பெண்களின் மீதான இதுபோன்ற ஆபாசத்தாக்குதலை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவேண்டும். ஒரு காவல்துறை அதிகாரியின் கண்ணியத்தையே சீர்குலைப்பது என்பதை எளிதாக கடந்துபோய்விட முடியாது. இது நாளை மற்ற பெண்கள் மீது இன்னும் மோசமாக ஏவப்படும். தமிழ்நாடு காவல்துறை உடனடியாக குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு சக பெண்ணாக, நாடாளுமன்ற உறுப்பினராக எனது தொகுதியின் காவல்துறை கண்காணிப்பாளர் திருமிகு. வந்திதா பாண்டே அவர்களுக்கு எனது அன்பையும்,உறுதியான ஆதரவையும் தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்று கூறியிருக்கிறார்.
இந்த விவகாரத்தில் காவல் அதிகாரி வருண்குமாரை முதலில் சாதி சொல்லி இழிவாக பேசியது சீமான் தான் அதன் பின்னர் தான் சீமானின் ஆபாச தம்பிகள் அவரை கேவலமாக பேச துவங்கினர், அதில் இருபத்தி இரண்டு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அதில் 2 பேர் கைது செய்யப்பட்ட பின்னர் தான் நாம் தமிழர் ஐடி விங் மூலம் கட்சியினர் கண்ணியமாக பேச வேண்டும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.
நேற்று காவல் அதிகாரி வருண்குமார் என்னையும் என் குடும்பத்தினரையும் மிரட்டும் எவனையும் நான் விட மாட்டேன், தூண்டி விட்ட அனைவரையும் சட்டத்தின் முன்பு அவர்களை கொண்டு வந்து நிறுத்துவேன் என்று சொல்லி ( சீமான், இடும்பவனம் கார்த்தி ) மீது வழக்கு போட்டிருக்கிறார்,
இதற்கு பயந்து கொண்டே சீமான் இப்போது, ‘’எனக்கும் அதுக்கும் சம்மந்தம் இல்லை’’ என்று எஸ்கேப் ஆகியிருக்கிறார். சீமானே பேசுகிறார் என்று தைரியமாக இருந்த தம்பிகள் இப்போது உதறலில் இருக்கிறார்கள்.