வைரலாகும் சண்டாளன் கருணாநிதி பாடல்
விக்கிரவாண்டி தேர்தல் பரப்புரையின் போது சாட்டை துரைமுருகன் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து பாடிய, ‘கள்ளத்தனம் செய்த கருணாநிதி’ என்ற பாடலுக்கு தி.மு.க.வினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து சாட்டை துரைமுருகன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் சீமான், ‘’நானும் அதே பாடலை பாடுகிறேன். சண்டாளன் கருணாநிதி என்று சொல்கிறேன். முடிந்தால் என்னையும் கைது செய்து சிறையில் அடைக்க முடியுமா?’ என்று ஸ்டாலினுக்கு சவால் விட்டுள்ளார்.
அதேநேரம், அடுத்தடுத்து நிகழும் கள்ளச்சாராய மரணங்கள் மற்றும் ஆம்ஸ்ட்ராங்க் கொலைவழக்கின் தாக்கத்தை மறைக்கவே துரைமுருகன் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம், சவுக்கு சங்கர் போன்று சாட்டை துரைமுருகன் மீதும், வெளியே வர முடியாத அளவுக்கு கடுமையான வழக்குகள் சேர்க்கப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட இருக்கிறார் என்று செய்திகள் வெளியாகின்றன.
தொடர்ந்து தி.மு.க. மீது கடுமையாக விமர்சனம் வைத்துவருகிறார். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்தின் போது, கள்ளச்சாராயம் விற்பனை செய்தவர் வீட்டில் ஒட்டப்பட்டிருந்த தி.மு.க. ஸ்டிக்கரைக் காட்டி, ‘இதைவிட வேறு என்ன சாட்சி வேண்டும். ஸ்டாலினே விற்பனைக்கு உடந்தை என்பது போன்று நேரடி தாக்குதல் நடத்தியிருந்தார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலையொட்டி, ‘பணமென்றால் பிணமும் வாயை பிளக்கும் என்கிற பழமொழியில் எந்த பொய்யும் இல்லை. திமுக சார்பாக 200 கோடிக்கு மேல் ஒரு இடைத்தேர்தலுக்கு செலவு செய்யப்பட்டிருக்கிறது திமுக சார்பாக வாக்கிற்கு 2000 ரூபாய் முதல் 4000 வரையும் கொடுக்கப்பட்டுள்ளது. பாமகவும் தன் பங்கிற்கு 60000 வாக்குகளை குறி வைத்து 500 வீதம் பட்டுவாடா செய்துள்ளது மக்கள் இரண்டு பக்கமும் வாங்கிக் கொண்டு சிரித்த முகத்தோடு தாராளமாக 82 % விழுக்காடு வாக்களித்துள்ளனர்’ என்று நேரடி குற்றச்சாட்டு வைத்திருந்தார்.
இதையொட்டி, நெல்லை, வீராணம் பகுதியில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்த சட்டை துரைமுருகனை திருச்சி சைபர் கிரைம் போலீசார் கைது செய்திருக்கிறார்கள். இதையடுத்து துரைமுருகன் கைதுக்கு நாம் தமிழர் கட்சியினர் கடுமையாக விமர்சனம் முன்வைப்பதுடன் நில்லாமல், கள்ளத்தனம் செய்த கருணாநிதி பாடலை வைரலாக்கி வருகிறார்கள்.