• Home
  • அரசியல்
  • ஸ்டாலின் ஆட்சியில் 6 மாதம் சம்பளம் வரலையாம்..!

ஸ்டாலின் ஆட்சியில் 6 மாதம் சம்பளம் வரலையாம்..!

Image

பரிதாபத்தில் தூய்மைப் பணி தொழிலாளர்கள்

வறுமை காரணமாகவே தூய்மைப் பணி செய்வதற்கு ஏழைகள் முன்வருகிறார்கள். அப்படிப்பட்ட பரிதாப ஏழை மக்களுக்கு கடந்த 6 மாத காலமாக சம்பளம் தராமல் தமிழக அரசு இழுத்தடிப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தான் சமூக நீதியா என்ற கேள்வி எழுந்துள்ளாது.

ஒன்றல்ல இரண்டல்ல கிட்டத்தட்ட முப்பதாயிரம் (30,000) கிராமப்புற அரசு பள்ளிகளில் கழிப்பறை சுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு கடந்த 6 மாதமாக ஊதியம் வழங்காமல் அரசு இழுத்தடிப்பு செய்கிறது. பல பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் பிற ஆசிரியர்கள் தங்களது பணத்தை கொண்டு தூய்மை பணித் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கியுள்ளனர்.

மார்ச் மாதம் முதல் ஊரக வளர்ச்சி துறையிடமிருந்து நிதி வரவில்லை எனவும், பஞ்சாயத்தில் பொது நிதி இருப்பு பற்றாக்குறையாக உள்ளதால் பள்ளிகளில் ஊதியம் மற்றும் பராமரிப்பிற்கு நிதி ஒதுக்க வாய்ப்பில்லை என BDO கூறுகிறார். இதை பற்றி பள்ளிக்கல்வித்துறை, ஊரக வளர்ச்சி துறை, வருவாய் துறை, தொழிலாளர் நலத்துறை என எந்த துறையும் கண்டுக்கொள்ளவில்லை. அவர்களுக்கு வழங்கும் ஊதியம் மிகக்குறைவு அதையும் கூட வழங்காமல் இருப்பது இந்த அரசிற்கு மிகப்பெரிய அவலம்.

இதை சட்டமன்றத்தில் பேசுவாரா ஸ்டாலின்..? தூய்மைப் பணியாளர்களுக்கு முதலில் நல்ல விடிவு கிடைக்கட்டும்.

Leave a Comment