என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 99
இந்த தொடரின் ஆரம்ப கட்டத்தில் பெருநகர மேயராக சைதை துரைசாமி தேர்தலில் பெற்ற சாதனை வெற்றி குறித்து சுருக்கமாகக் கூறப்பட்டிருந்தது. ஆனால், நிறைய நண்பர்கள் சைதை துரைசாமியின் சாதனை வெற்றி பற்றி அடிக்கடி விளக்கம் கேட்பதன் அடிப்படையில் இங்கு விரிவாகப் பதிவு செய்யப்படுகிறது.
மேயர் தேர்தல் வரலாற்றில் இந்திய அளவில் சரித்திர சாதனை படைத்த ஒரே மேயர், சைதை துரைசாமி மட்டும் தான். 2011 மேயர் தேர்தலில் அவர் படைத்த சாதனை வெற்றியை இதுவரை யாரும் முறியடிக்கவில்லை, இனியும் முறியடிக்க முடியாது என்றே சொல்ல வேண்டும்.
சென்னையின் முதல் அண்ணா தி.மு.க. மேயர் சைதை துரைசாமி என்பது எல்லோருக்கும் தெரிந்த தகவல். ஆனால், தி.மு.க.வின் கோட்டை என்று கருதப்பட்ட சென்னையை முழுமையாக வெற்றி கொண்ட ஒரே நபர் சைதை துரைசாமி மட்டும் தான். இந்த வெற்றிக்குப் பின்னணியில் நிறைய சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.
1980 சட்டப்பேரவை தேர்தலில் சைதை துரைசாமி வெற்றி வாய்ப்பை இழந்த நேரத்தில், ’கவலைப்படாதே நீதான் அண்ணா திமுகவின் முதல் மேயர், அதற்கான பணிகளைத் தொடங்கு’ என்று புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். உத்தரவு போட்டார். ஆனால், நீதிமன்ற நடவடிக்கைகளால் அவரது ஆட்சி காலத்தில் மேயர் தேர்தல் நடைபெறவே இல்லை. ஆனால் புரட்சித்தலைவரின் தீர்க்கதரிசனத்தை நிஜமாக்குவது போன்று, புரட்சித்தலைவி ஜெயலலிதா 2011ல் சைதை துரைசாமிக்கு பெருநகர சென்னை மேயராக நிறுத்தி வெற்றி பெற வைத்தார் என்பது ஒரு வரலாற்று ஆச்சர்யம்.
புரட்சித்தலைவர் மரணத்திற்குப் பிறகு நீண்ட காலம் தேர்தல் அரசியலில் ஒதுக்கப்பட்டிருந்த சைதை துரைசாமிக்கு அந்த மேயர் வாய்ப்பு கிடைத்தது எப்படி தெரியுமா?
- நாளை பார்க்கலாம்.