எம்.ஜி.ஆர். மனதில் விதை தூவிய சைதை துரைசாமி  

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 53

ரசிகர் மன்றத்தினருக்கு தனிக்கொடி தேவையில்லை என்று புரட்சித்தலைவர் நிராகரித்ததைக் கேட்டு அத்தனை நிர்வாகிகளும் அதிர்ந்து நிற்க, சைதை துரைசாமி மட்டும் அவரது காருக்கு அருகே வந்து நின்று, தன்னுடைய ஆதங்கத்தைத் தைரியமாகக் கொட்டினார்.

“வணக்கம்ணே. எம்ஜிஆர் மன்றத்தை க்ளோஸ் பண்ணிட்டீங்க. இனி ஒரு எம்ஜிஆர் மன்றம் கூட உருவாகாத வகையில் உங்களது பேச்சு அமைந்து விட்டது’ என்று கூறியதும் புரட்சித்தலைவர் ஆச்சர்யமாக, “என்ன?” என்று கேட்டார்.

கிடைத்த சந்தர்ப்பத்தில் பேசத் தொடங்கினார் சைதை துரைசாமி. எம்.ஜி.ஆர். மன்றங்களுக்கு வட்டச் செயலாளர்கள் அனுமதி கொடுக்காமல் பிள்ளையோ பிள்ளை மு.க.முத்து மன்றங்கள் திறக்கச்சொல்லி கட்டாயப்படுத்துவது குறித்தும், அதை தட்டிக்கேட்ட ரசிகர்களுக்கு எதிராக சதி நடப்பதையும் ஆதாரபூர்வமாகக் கூறினார்.

தொடர்ந்து பேசிய சைதை துரைசாமி, ‘’இப்போது நீங்கள் பேசியது அந்த வட்ட கிளைக்கழக செயலாளர்களுக்கு ஆதரவாக அமைந்துவிட்டது, அதனால் தான் அப்படி சொன்னேன்’ என்றதுடன் நில்லாமல், கட்சிக்குள் புரட்சித்தலைவருக்கு எதிராக நடந்துவரும் பல்வேறு சூழ்ச்சிகள் குறித்தும் சம்பந்தப்பட்ட ஆட்கள், இடம் குறித்தும் ஆதாரங்களுடன் பேசி முடித்தார்.  

அத்தனையும் கேட்டுக்கொண்ட புரட்சித்தலைவர், ‘நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்று கூறிவிட்டு கிளம்பினார். சைதை துரைசாமி தூவிய விதை அன்றைய தினமே முளைக்கத் தொடங்கியது.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment