300 ஆண்டுகளுக்குப் பிறகு சித்த வைத்திய மறுமலர்ச்சி

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 82

ஆங்கிலேயர் வருகைக்கு முன்பு தமிழகத்தில் சித்த வைத்தியமே புழக்கத்தில் இருந்தது. பாட்டி வைத்தியம், கை வைத்தியம் என்ற பெயரில் சித்த வைத்தியத்தை எல்லா வீடுகளிலும் கடைபிடித்து வந்தனர். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அலோபதி மருத்துவமே சிறந்தது என்று ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டது.

இந்த நிலையில் அதாவது கிட்டத்தட்ட மூன்று நூற்றாண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் மீண்டும் சித்த வைத்தியத்திற்கு வரவேற்பு கிடைக்கச் செய்தவர் மேயர் சைதை துரைசாமி. டெங்கு காய்ச்சலைக் குணப்படுத்தியதால் மக்களுக்கு சித்த வைத்தியம் மீதும் இயற்கை மருந்துகள் மீதும் நம்பிக்கை கிடைத்தது. சைதை துரைசாமி காட்டிய வழியில் தான் கொரோனா காலத்திலும் தமிழக மக்களுக்கு சித்த வைத்திய மருந்துகள் நம்பிக்கை கொடுத்தன.

அலோபதியில் டெங்கு நோய்க்கு மருந்து இல்லை என்றதும் மேயராக இருந்த சைதை துரைசாமி அமைதியாக இருந்துவிடாமல், நிலவேம்புக் கஷாயம், பப்பாளி இலைச் சாறு மூலம் சித்த மருத்துவத்தை தமிழகத்தில் மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தார் என்றால், அந்த அளவுக்கு இந்த இயற்கை மருந்துகள் பற்றித் தெளிவாகவும் முழுமையாகவும் அறிந்திருந்தார்.

சைதை துரைசாமியின் நடவடிக்கையாலே பொதுமக்கள் செலவின்றி டெங்கு காய்ச்சலில் இருந்து மக்கள் விடுதலை பெற முடிந்தது. அதோடு அனைத்து சித்த மருந்துகளும் மீண்டும் வீட்டுக்குள் புழக்கத்திற்கு வரத் தொடங்கின. தமிழகம் முழுக்கவும் நாட்டு மருந்துக் கடைகள் அதிகரிக்கத் தொடங்கியது மட்டுமின்றி, தமிழர் உணவுகளுக்கும் மூலிகைகளுக்கும் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கத் தொடங்கின.

அதுசரி, டெங்குவைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு நிலவேம்பு கஷாயம் மற்றும் பப்பாளி இலைச் சாறு ஆகியவற்றில் எத்தகைய ஆற்றல் இருக்கிறது என்று தெரியுமா?

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment