• Home
  • உறவுகள்
  • சொந்தக்காரங்களே வீட்டுக்கு வராதீங்க

சொந்தக்காரங்களே வீட்டுக்கு வராதீங்க

Image

மாறிவரும் தமிழ்நாடு கலாச்சாரம்

உறவினர் வீட்டுக்குப் போவது என்றாலும், உறவினர் வீட்டுக்கு வருகிறார்கள் என்றாலும் சலித்துக்கொள்ளும் ஒரு புதிய தலைமுறை வந்துவிட்டது. எதுவா இருந்தாலும் போனில் பேசிக்கொள்ளலாமே என்ற மனநிலை. தங்கள் தனிமை பாதிக்கப்படுகிறது என்பதை மிகப்பெரும் தொந்தரவாகப் பார்க்கிறார்கள்.

அதனால் உறவுகள் என்று யார் வந்தாலும் அதிகபட்சம் ஹாலில் உட்கார வைத்து ஸ்நாக்ஸ் கொடுத்து பத்து நிமிடங்கள் பேசினாலே அதிகம் என்ற நிலை வந்து விட்டது. அதற்கு மேல் என்றால் கடிகாரத்தைப் பார்க்கத் தொடங்கிவிடுகிறார்கள்.

முன்னர் எந்தவித முன்னறிவிப்புமே இல்லாமல் குழந்தைகளை லீவுக்கு உறவினர் வீட்டுக்கு அனுப்புவார்கள். ரொம்ப நாளாச்சு பார்த்து பார்த்துட்டு போலாம் என பஸ் பிடித்து எடுத்தேறி வந்து பார்த்துவிட்டு போவார்கள். திருமண வீடுகள், மற்ற விசேஷ வீடுகள், துக்க வீடுகளுக்கு சம்மன் இல்லாமல் ஆஜர் ஆவார்கள். எதுவும் சொல்லாமல் வீட்டில் நிறைய நாள் தங்குவார்கள். சொந்த விஷயங்களில் எல்லாம் உரிமையுடன் தலையிடுவார்கள், சண்டை போடுவார்கள்.

ஆனால் இப்போது அவரவர் வாழ்க்கை அவரவர் முன்னேற்றம் அவரவர் ஓட்டம். யாரையும் குறை சொல்ல முடியாத சூழல் வந்துவிட்டது. . இதற்கு முக்கியமான காரணம்,செல்போன். முன்பு பல விஷயங்கள் பேசப்படாமலே இருக்கும், உறவினர் வீட்டுக்கு வந்தா அந்த விஷயங்களை பற்றி பேசலாம் இப்ப தொலைபேசியில் எல்லாத்தையும் பேசிவிடுகிறார்கள். அதனால் நேரில் சந்திக்கும் போது பத்து நிமிஷத்துக்கு மேல பேசுறதுக்கும் எதுவும் இல்லை என்ற சலிப்பு வருகிறது.

யாருக்கும் சமைச்சுப் போட முடிய மாட்டேங்குது, யாருக்கு என்ன பிடிக்கும்னு தெரியலை என்றெல்லாம் சாக்குப்போக்கு சொல்லி பெண்கள் தப்பிக்கிறார்கள். யார் கூடவும் பேசப் பிடிக்கலை என்று சிறியவர்கள் எஸ்கேப் ஆகிறார்கள். வீட்டில் இருக்கும் பெரியவர்கள் மட்டுமே உறவுகள் வருகைக்கும், கொஞ்ச நேரம் பேசலாமே என்றும் ஆதங்கப்படுகிறார்கள்.

மோப்பக்குழையும் அனிச்சம், அதீதிதேவா பவ என்பதெல்லாம் இனி ஏட்டுச்சுரைக்காய் மட்டுமே.

Leave a Comment