ஆன்லைனில் தாலிக்குத் தங்கம் பதிவு

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 337

அரசியல் பொதுவாழ்விலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் நேர்மைக்கும் சேவைக்கும் அதிக மதிப்பு கொடுப்பவர் மேயர் சைதை துரைசாமி. ஆகவே, கண்ணுக்கு முன்பு எங்கு தவறு நடந்தாலும், அதை சீர்படுத்துவது தன்னுடைய கடமை என்றே நினைத்தார். அதனாலே, மேயர் பதவியின் கடமை இல்லை என்றாலும் புரட்சித்தலைவி ஜெயலலிதா கொண்டுவந்த தாலிக்குத் தங்கம் திட்டம் அனைத்துப் பயனாளிகளையும் சென்றடைய வேண்டும் என்பதற்காக சீர்திருத்த நடவடிக்கை எடுக்க முன்வந்தார்.

அரசு திட்டங்களில் தலையிட்டால், தலைமைச் செயலக உயர் அதிகாரிகளின் கோபத்துக்கு ஆளாகலாம் என்று மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை செய்ததை மேயர் சைதை துரைசாமி கண்டுகொள்ளவே இல்லை. ஏனென்றால், சைதை துரைசாமி என்ன செய்தாலும் அது பொதுமக்கள் நலன் மட்டுமே இருக்கும் என்பது அன்றைய முதல்வர் ஜெயலலிதாவுக்கும் மற்ற உயர் அதிகாரிகளுக்கும் நன்கு தெரியும். எனவே, தன்னுடைய செயலால் முதல்வருக்கு மக்களிடம் நல்ல பெயர் உருவாகும் என்பதை உறுதியாக நம்பி செயலாற்றினார்.

தாலிக்குத் தங்கம் திட்டத்திற்கு  மனு கொடுப்பவருக்கு, அதனை பெற்றுக்கொண்டதற்கான  அத்தாட்சி கூட  கொடுக்கப்படுவதில்லை என்பதை அறிந்ததும் முதல் வேலையாக இந்த நிலையை மாற்றினார்.  மனு கொடுக்கும் நபர்களுக்கு உடனடியாக  அத்தாட்சி வழங்க ஆணை பிறப்பித்தார். அதேபோன்று விண்ணப்பத்தை நல வாழ்வு மையத்திற்கு அனுப்பிய தேதி, திரும்ப வந்த தேதி போன்ற அனைத்தும் கம்ப்யூட்டரில் பதிவு செய்வதற்கு ஏற்பாடு செய்தார்.

இந்த திட்டத்தில் முறைகேடு நடக்கக்கூடாது என்பதற்காக ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் திட்டமும் கொண்டுவந்தார். விண்ணப்பங்களில் குறை இருப்பது தெரியவந்தால், அதனை உடனடியாக நிராகரிப்பதே அதுவரை நடைமுறையில் இருந்தது. அதனையும் மாற்றுவதற்கு முன்வந்தார் மேயர் சைதை துரைசாமி.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment