பிரகாஷ்ராஜ், சூர்யாவுக்கு ரத்தம் கொதிக்கவில்லையா?
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயத்தினால் செத்துப்போன 21 பேரின் சடலங்கள் ஒரே இடத்தில் வைத்து எரியூட்டப்பட்ட சம்பவம் காணும் அத்தனை பேரையும் கண்கலங்க வைத்திருக்கிறது.
கள்ளச்சாராயத்தால் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மருத்துவமனையின் தூண்களிலும் சாலைகளிலும் கதறி கொண்டிருக்கும் காட்சிகள் கண்களை கலங்க வைக்கிறது!
இத்தனைக்கு பிறகும் திரைத்துறையை சேர்ந்தவர்களிடம் இருந்து ஒரு குரலும் வரவில்லை. நடிகர் விஜய் மட்டும் அடுத்து அரசியலுக்கு வரப்போவதால் வந்து எட்டிப் பார்த்துவிட்டுப் போயிருக்கிறார். நடிகர் விஷால் குரல் கொடுத்திருக்கிறார். கமல்ஹாசனும் அரசியல் காரணங்களுக்காக பேசியிருக்கிறார்.
மற்றபடி மத்திய அரசையும் மோடியையும் அவ்வப்போது சீண்டும் நடிகர் சூர்யாவும், பிரகாஷ் ராஜூம் இதுவரை வாய் திறக்கவே இல்லை. யார் தவறு செய்தாலும் அதை கண்டிக்கும் போது தான் இவர்கள் மீது மதிப்பும், மரியாதையும் வரும். மோடி மீது மட்டும் தான் கோபத்தைக் காட்டுவோம் என்றால் அது எப்படி சரியாக இருக்கும்..?
எல்லா காலகட்டத்திலும் பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நில்லுங்கள். அதுவே, உண்மையான கலைஞனுக்கு அழகு.