எல்லோருக்கும் ஒரு மழை

Image

கவித்துவம்

துயரம்போல் பெய்கிறது மழை என்றவரும்,

சந்தோஷம்போல் பெய்கிறது மழை என்றவரும் ,

எதிரெதிர் மாடியிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தனர்

எப்போதும் போல் பெய்து கொண்டிருந்தது

மழை

 –  ராஜாசந்திரசேகர்

Leave a Comment