- தேசிய அரசியலில் ஒரு புதிய திருப்பம்
பொதுவாக மாநிலத் தலைவர்கள் குறித்து தேசியக் கட்சிகள் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. அந்தந்த மாநிலங்களுக்கு வரும் நேரத்தில் மட்டும் அந்த மாநிலத் தலைவர்களை ஓரிரண்டு வார்த்தைகள் பேசிவிட்டு போய்விடுவார்கள்.
ஆனால், இந்திய அரசியலில் புதிய திருப்பமாக டெல்லியில் ராகுல் புதிய அத்தியாயம் எழுதியிருக்கிறார். ஆம், தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை ஒட்டி டெல்லியில் உள்ள திமுக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியிருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி.
இந்திய மற்றும் தமிழ்நாடு அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்திய தலைவர் என்றும் தமிழ் மக்களின் மொழி கலாச்சாரம் ஆகியவற்றை பாதுகாப்பதுடன் சமூக நீதி, பொருளாதார சமத்துவத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றிற்கான மரபை கருணாநிதி கொடுத்திருக்கிறார் என்று கருணாநிதியை பாராட்டியிருக்கிறார்.
தமிழகம் மீதும் தமிழிகத் தலைவர்கள் மீதும் உண்மையிலே அக்கறை கொண்டவர் ராகுல் என்று தி.மு.க.வினர் ஓவராக பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.