மகிழ்ச்சி அடைவதற்கு ரொம்பவும் சிரமம் எடுத்துக்கொள்ளவே வேண்டாம். இதோ, இந்த பத்து முத்துக்களை வாழ்க்கையில் கடைப்பிடியுங்கள். வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
- மகிழ்ச்சி என்பது யாதெனில், நம்மிடம் இருக்கும் ஒவ்வொன்றையும் உயர்வாகவும், இல்லாதவற்றை தேவையற்றதாகவும் கருதும் மனநிலை தான்.
- மகிழ்ச்சி என்பது யாதெனில், அடுத்து நடக்கப்போவது எல்லாமே நன்மையானது என்றும், நடந்தது எல்லாம் நன்மைக்கே என்றும் ஏற்றுக்கொள்வது தான்.
- மகிழ்ச்சி என்பது யாதெனில், கடவுள் நம் உள்ளத்தில் இருக்கிறார், இந்த உடம்பு தான் ஆலயம் என்ற நம்பிக்கை தான்.
- மகிழ்ச்சி என்பது யாதெனில், நமக்காக யாரும் இல்லை என்று வருத்தப்படாமல், இந்த பிரபஞ்சமே உள்ளது என்று பெருமிதம் கொள்வது.
- மகிழ்ச்சி என்பது யாதெனில், எதையும், எவரையும் நம்பியிருக்காத இயல்பான மனநிலை.
- மகிழ்ச்சி என்பது யாதெனில், பிறரால் நமக்கு எந்த துன்பமும் இழைத்துவிட முடியாது என்பதை உணர்வது தான்.
- மகிழ்ச்சி என்பது யாதெனில், எங்கேயோ அதற்கான பாதை இருக்கிறது என்று தேடிக்கொண்டிராமல், இங்கேயே மகிழ்ச்சியாக இருப்பதுதான்.
- மகிழ்ச்சி என்பது யாதெனில், பிரச்னைகளைக் கண்டு அஞ்சுவது அல்ல… பிரச்னைகளை எதிர்கொண்டு சமாளிப்பது.
- மகிழ்ச்சி என்பது யாதெனில், பிறருக்காக எதையும் மாற்றிக்கொள்ளாமல் நமது வழியில் பயணம் தொடர்வது.
- மகிழ்ச்சி என்பது யாதெனில், தினமும் நடக்கும் சாதாரண விஷயங்களையும் ஆனந்தமாக மாற்றிக்கொள்வது தான்.