ஞானகுரு :
அழகு விஷயத்தில் பெண்களும் செல்வாக்கு விஷயத்தில் ஆண்களும் அகம்பாவம் கொள்கிறார்கள். தங்களைவிட அழகும், பண்மும் உள்ள மனிதர்கள் அதிகம் இருக்கிறார்கள் என்ற உண்மையை உணராத அறியாமையே அகம்பாவம் தருகிறது.
எந்த வகையிலும் தான் மட்டும் உயர்ந்தவன் இல்லை, பிறர் தாழ்ந்தவர் இல்லை என்ற எண்ணமே நிம்மதியும் மகிழ்ச்சியும் தரும். தனக்குக் கிடைக்கும் ஒவ்வொரு வெற்றியையும், ஒரு குழு முயற்சி வெற்றியாகக் கருதுவதே அகம்பாவம் அகற்றும் வழி. ஓட்டப் போட்டியில் ஒருவர் வெற்றி பெறுகிறார் என்றாலும், பயிற்சியாளர்களின் வழிகாட்டுதல், சத்தான உணவு, பார்வையாளர்களின் வரவேற்பு, அன்றைய மனநிலை, சுற்றுச்சூழல் போன்ற பல்வேறு காரணிகள் சாதகமாக அமைய வேண்டும் என்ற உண்மையைப் புரிந்துகொள்பவர் எல்லா நேரத்திலும் நிதானமாக இருப்பார். எல்லோரையும் சமம் என்று எண்ணுவதே அகம்பாவம் அகற்றும் எளிய வழி.