Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

கேள்வி : வயநாடு நிலச்சரிவுக்கு ஐயப்பனின் கோபம் காரணமா அல்லது இயற்கை சுரண்டலா? – எம்.ஞானப்பிரகாசம், கடலூர்.

168 viewsAugust 2, 2024
0
gyaanaguru.com August 2, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish August 2, 2024

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted August 2, 2024 0 Comments

ஞானகுரு :

வயநாட்டில் நடந்திருக்கும் பேரழிவுக்குக் காடுகள் அழிப்பும், காலநிலை மாற்றத்தால் அதிகரிக்கும் பெருமழையும் முதன்மைக் காரணங்கள் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சொல்கிறார்கள். மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை சுரண்டாமல் காப்பாற்றியிருந்தால் இந்த இழப்பினை குறைத்திருக்க அல்லது தடுத்திருக்க முடியும் என்றும் சொல்கிறார்கள்.

இது அறிவியல் ரீதியாகப் பார்க்கும்போது சரியெனத் தோன்றும். ஆனால், உண்மையில் இயற்கையின் சுழற்சியில் இது போன்ற நிகழ்வுகள் சர்வ சாதாரணம். மனிதர்கள் இயற்கையை சீண்டாத காலத்திலும் இதைவிட கொடூர நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. எத்தனையோ உயிரினங்கள் அழிந்து போயிருக்கின்றன.

டயனோசர், மம்மூத் போன்ற உயிரினங்கள் இயற்கைக்கு என்ன கேடு விளைவித்தன. ஆனால், அவை அழியத்தான் செய்தன. எனவே, மனிதர்களால் இயற்கையைக் கெடுக்க முடியும், இயற்கையை சுரண்ட முடியும் என்றாலும் அதனால் இயற்கைக்கு ஏற்படும் பாதிப்பு ஒரு சதவிகிதம் கூட இல்லை.

மனிதர்கள் எதுவும் செய்யாமல் இருந்தாலும் இயற்கை பேரழிவு நடக்கவே செய்யும். புயல், சூறாவளி, பூகம்பம், எரிமலை, நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்கள் எந்த அளவுக்கு வரும், எப்படிப்பட்ட பாதிப்புகள் உண்டாகும் என்பதை எல்லாம் யாராலும் அத்தனை எளிதில் கணக்கிட முடியாது. கணக்கிட்டாலும் தப்பிவிட முடியாது.

ஐயப்பன் கோயிலுக்குள் பெண்கள் நுழைவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டதிலிருந்தே இது போன்ற சோதனைகள் கேரளத்துக்கு ஏற்படுவதாக ஆன்மிகவாதிகள் சொல்லிவருவது முட்டாள்தனத்தின் உச்சம். ஐயப்பன் கோயிலுக்குள் நுழைவதற்கு அனுமதி கொடுத்த நீதிபதிகள், அரசியல்வாதிகள், காவலர்களை எல்லாம் எதுவும் செய்யாத ஐயப்பன், நள்ளிரவில் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்த அப்பாவி ஜனங்களைக் கொலை செய்திருக்கிறார் என்றால், அவர் கடவுள் தானா..?

கடவுள் என்று ஒருவர் இருந்தால் கூட அவரால் இயற்கையைக் கட்டுப்படுத்த முடியாது என்பதே உண்மை. இயற்கையைப் புரிந்துகொண்டு மனிதர்கள் தான் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்.

 

gyaanaguru.com Changed status to publish August 2, 2024
Login

கட்டுரை பகுதிகள்

  • அரசியல்385
  • அழகு71
  • உறவுகள்112
  • எஸ்.கே.முருகன்95
  • கவித்துவம்65
  • கவுன்சிலிங்32
  • காமம்26
  • சக்சஸ்95
  • சட்டம்48
  • சர்ச்சை99
  • சிரிப்பு63
  • சினிமா34
  • சைதை துரைசாமி449
  • ஞானகுரு245
  • தமிழ் லீடர்179
  • நாட்டியாலயா13
  • பணம்90
  • பிரபலங்கள்64
  • மகிழ்ச்சி163
  • மந்திரச்சொல்467
  • மருத்துவர்கள்84
  • மனம்86
  • யாக்கை227
All Rights Reserved 2025 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US