ஞானகுரு ;
கவர்னர் ஆர்.என்.ரவி அரை வேக்காடு என்றால் முதல்வர் ஸ்டாலின் கால் வேக்காடு. இவர்களை விட உருப்படாத அரசியல் சீமானுடையது. தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து போன்றவை எல்லாம் சாதாரண அரசியல் சம்பிரதாயம் மட்டுமே. இதற்காக பொங்குவதும் போராடுவதும் மக்களுக்கு எந்த வகையிலும் நன்மை பயக்காது.
மக்களை இனம், மதம், மொழி கடந்தவர்களாக மாற்றுவதற்கே அரசும் அரசியல்வாதிகளும் போராட வேண்டும். அப்படி எந்த முயற்சியும் செய்யாமல் தங்கள் இருப்பைக் காட்டுவதற்காக சுயநலத்துடன் போராடுகிறார்கள். இந்த கயவர்களிடமிருந்து மக்கள் விலகி நிற்க வேண்டும். நாடுகளின் எல்லைக் கோடுகளும் அழிய வேண்டும். ஒரே இனம், ஒரே மொழி, ஒரே நாடு எனும் சூழல் உருவாக வேண்டும். அதுவே, மனித குலத்துக்கு நல்லது.
gyaanaguru.com Changed status to publish October 19, 2024