ஞானகுரு :
பயிர் விளைச்சலை அழிக்க எலியும், எலியை அழிக்க பூனையும், பூனையை அழிக்க புலியும், புலியை அழிக்க மனிதனும் படைக்கப்பட்டான் என்று சொன்னாலும் நம்புவீர்கள். ஆனால், உண்மை என்ன தெரியுமா..? மனிதனைப் போன்ற அற்பங்களைப் படைப்பதற்கு இயற்கைக்கு எந்த நோக்கமும் இருந்திருக்கத் தேவையில்லை. நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளானே மனிதன். இந்த பிரபஞ்சம் தோன்றிய காலத்திலிருந்து மனிதன் உருவான காலத்தை கணக்கிட்டுப் பார்… எத்தனை அற்பம் நாம் என்பது புரியவரும்.
gyaanaguru.com Changed status to publish October 7, 2024