ஞானகுரு :
நீங்கள் விரும்பும் வகையில் பேசும் குருவை நம்பாதீர்கள். சுகமான வாழ்வை வெறுக்கச் சொல்லும் பகட்டு குருவையும் நம்ப வேண்டாம். உன்னிடம் காணிக்கை பெற்று, அதனை இறைவனுக்கும் இல்லாதவருக்கும் கொடுக்கப்போகிறேன் என்று டொனேஷன் வாங்கும் குருவை நம்பவே வேண்டாம். என்னுடன் எத்தனை பெரிய மனிதர்கள் இருக்கிறார்கள் பார் என்று விளம்பரப்படுத்தும் நபர்கள் குருவே இல்லை.
வாழ்க்கை முழுவதும் இன்பமும் துன்பமும் கலந்தே இருக்கும் என்ற உண்மையை நெத்தியில் அடிப்பதுபோல் கூறுபவரின் கருத்துக்களை கேளுங்கள். இது போல் உண்மை பேசும் குருக்கள் அநேகம் பேர் இருக்கிறார்கள். எல்லோருடைய கருத்துக்களையும் கேளுங்கள். போதுமான அளவு கற்றுக்கொண்டதும் நகர்ந்துவிடுங்கள். ஒரு நல்ல குரு யாரையும் சிஷ்யனாக ஏற்றுக்கொள்ள மாட்டார். அவருக்குத் தெரியும், எல்லோரும் குருவாக இருப்பதற்கு தகுதியானவர்கள்.