ஞானகுரு :
எந்த ஒரு செடியும் மலர்வதற்கு சலிப்பதில்லை. எந்த ஒரு நதியும் ஓடுவதற்குத் தயங்குவதில்லை. ரசிகர்கள் பாராட்டுகிறார்களா என்றெல்லாம் பார்க்காமல்தான் குயில்கள் கூவுகின்றன. இயற்கை அதனதன் வேலையை செவ்வனே செய்துகொண்டேதான் இருக்கின்றன. ஆனால் மனிதனுக்கு மட்டும்தான், அவன் செயலில் அலுப்பு உண்டாகிறது.
இப்படியொரு சிந்தனை நல்லதுதான். ஆனால், தினமும் எழுவதும், சாப்பிடுவதும், உழைப்பதும், தூங்குவதும் இயல்பாக நடக்கிறது என்றால், அதைவிட சிறந்த சொர்க்கம் வேறு எதுவாக இருக்க முடியும்? இந்த இயந்திரத்தனம் வேண்டாம் என்றால், ஏதேனும் அரசு மருத்துவமனையில் ஒரு மணி நேரம் சுற்றிப் பாருங்கள். உங்கள் வாழ்க்கை எத்தனை அருமை என்பது புரிந்துவிடும்
gyaanaguru.com Changed status to publish October 7, 2024