ஞானகுரு :
குழந்தையின் குறும்புத்தனத்தை உள்ளூர ரசிக்க வேண்டுமே தவிர கொண்டாடக்கூடாது. தான் செய்யும் குறும்புத்தனம் பெற்றோருக்குப் பிடிக்கிறது என்று குழந்தைக்குத் தெரியவந்தால், அதிகம் குறும்புத்தனம் செய்வார்கள். எனவே, குறும்புத்தனத்தை பாராட்டுவதும் ரசிப்பதும் ரொம்பவே ஆபத்து. அவர்களுடைய குறும்பு அடுத்தவருக்குத் தொந்தரவு எனும் எல்லையைத் தொடுவதற்குள் கண்டிப்பு காட்டுங்கள். தன்னுடைய செயல் பெற்றோருக்குப் பிடிக்கவில்லை என்று தெளிவாகத் தெரிந்துகொண்டால் நிச்சயம் குழந்தை மாறிவிடும். யானை, குதிரைகூட மனிதன் சொல்வதைக் கேட்கிறது, உங்கள் பிள்ளை கேட்காதா என்ன?
gyaanaguru.com Changed status to publish February 3, 2025