Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

சுற்றுலா செல்ல நினைப்பது ஆனந்தமாக இருக்கிறது, ஆனால் அங்கு மகிழ்ச்சி கிடைப்பதில்லை ஏன்..?

173 viewsOctober 21, 2024
0
gyaanaguru.com October 21, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish October 21, 2024

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted October 21, 2024 0 Comments

ஞானகுரு ;

ஆனந்தமாக சுற்றுலா செல்வது நிச்சயம் நல்ல ஓய்வுதான். ஆனால் ஒரே நாளில் எட்டு இடங்களை சுற்றிப்பார்த்து, அத்தனையையும் பார்த்துவிட்டேன் என்று சொல்லிக்கொள்வதால் மனதிற்கு நிம்மதியும் திருப்தியும் நிச்சயம் கிடைக்காது. ஆக்ராவிற்கு போய் தாஜ்மஹாலை விறுவிறுவென சுற்றிப்பார்த்து, அதன் எதிரே நின்று போட்டோ எடுத்துக்கொள்வதால் மனம் சந்தோஷம் அடையாது.

அந்த இடத்தில் நீ ஷாஜகானாக அல்லது மும்தாஜாக மாற வேண்டும். இத்தனை பெரிய கல்லறை கட்டுவதற்கு எப்படி சிந்தனை ஏற்பட்டது, அந்த அளவுக்கு ஷாஜகான் மனதில் மும்தாஜ் எப்படி இடம் பிடித்தாள், எப்படியெல்லாம் கட்டியிருப்பார்கள், எந்த ஆண்டு கட்டப்பட்டது, எத்தனை பேர் கட்டினார்கள் என்றெல்லாம் தேடிப்படித்தும், கேட்டும் தெரிந்துகொள். அப்போதுதான் தாஜ்மஹாலின் ஆழமும் அர்த்தமும் உனக்குப் புரியவரும். கண்களை மூடிப்பார்த்தாலும் உன் மனதில் தாஜ்மஹால் சப்பணமிட்டு அமர்ந்துகொண்டு அளப்பரிய சந்தோஷம் கொடுக்கும். அந்த சந்தோஷம் உன் மனம் முழுவதும் நிரம்பிவழியும்போது… பரிபூரண ஓய்வு கிடைக்கும்.

gyaanaguru.com Changed status to publish October 21, 2024
Login
  • Books
  • அரசியல்
  • அழகு
  • உறவுகள்
  • எஸ்.கே.முருகன்
  • கவித்துவம்
  • கவுன்சிலிங்
  • காமம்
  • சக்சஸ்
  • சட்டம்
  • சர்ச்சை
  • சிரிப்பு
  • சினிமா
  • சைதை துரைசாமி
  • ஞானகுரு
  • தமிழ் லீடர்
  • நாட்டியாலயா
  • பணம்
  • பிரபலங்கள்
  • மகிழ்ச்சி
  • மந்திரச்சொல்
  • மருத்துவர்கள்
  • மனம்
  • யாக்கை
All Rights Reserved 2025 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US